கதை: தையல்காரன் சம்பாச்சு


தையல்காரன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சம்பாச்சு.அவனிடம் மேல் சட்டை தைக்கக் கொடுத்திருந்த ஒருவன் வந்து,சட்டையைப் போட்டுப் பார்த்ததில் ஒரு கை குட்டையாக இருந்தது.

அதை சரி செய்ய வேண்டும் என்று அவன் சொன்னபோது சம்பாச்சு சொன்னான்,''இந்த துணி கலை நயம்வாய்ந்த துணி.இதைத் திரும்பத் தைத்தால் அதன் நயம் கெட்டுவிடும்.கையைக் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.''

சரியென்று பார்த்தால் முதுகுப் பக்கம் துணி அதிகமாக இருந்ததால் மிக லூசாக இருந்தது.இதற்கென்ன செய்வது என்று கேட்டதற்கு,''கொஞ்சம் கூனிக் கொள்ளுங்கள்.சரியாக இருக்கும்.இவ்வளவு நல்லதுணியை மீண்டும் பிரித்து அதன் அழகைக் கெடுக்க விரும்பவில்லை.'' என்றான் சம்பாச்சு.

வேறு வழியின்றி அவன் சொன்ன மாதிரியே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டு சற்றுக் கூனியவாறு நடந்து கொண்டு கடையை விட்டு வெளியேறினான்.

வழியில் ஒருவன் அவனைப் பார்த்து,'இந்த சட்டைமிக அழகாக இருக்கிறது. இதை சம்பாச்சு தான் தைத்திருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.'என்றான்.

சட்டைக்காரனுக்கோ மிக ஆச்சரியம்.''எவ்வாறு இவ்வளவு சரியாகச் சொன்னாய்?''என்று கேட்டான்.

வந்தவன் சொன்னான், ''எனக்கு எப்படித் தெரியும்  என்றா கேட்கிறீர்கள்?சம்பாச்சுவால் தான் உங்களைப் போன்ற கூனனுக்கு இவ்வளவு அழகாக ஆடையை தைக்க முடியும்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *