அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே - 2
1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர் - 2
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர் - நன்றி உமக்கு நன்றி - 2
2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர் - 2
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர் - நன்றி உமக்கு நன்றி - 2
3. உலையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே - 2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே - நன்றி உமக்கு நன்றி - 2
ஆட்கொள்ள வந்திடுவாய் - தூய
ஆவியே எழுந்தருள்வாய்
ஆவலுடன் நான் காத்திருந்தேன் - 2 என்
ஆசைகள் மலர்ந்திட விரைந்திடுவாய்
1. அக்கினிப் பிழம்பாய் கனன்றெழுந்து
தீமையை எரித்திட வந்திடுவாய்
இடியாய் மீண்டும் உருவெடுத்து
அடிமை வாழ்வினை அழித்திடுவாய்
இருளாய் உலகம் தவிக்கின்றதே - உன்
வரவால் விடியலும் தந்திட வா
வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை - 2
2. புயலாய் சீறி சுழன்றெழுந்து
தாழ்வினை போக்கிட வந்திடுவாய்
அலையாய் தொடர்ந்து வந்திங்கு
மனிதம் மலர்ந்திட செய்திடுவாய்
மலையாய் துன்பம் எழுந்தாலும் - உன்
வரவால் யாவும் நொறுங்கிடுமே
வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை - 2
ஆவியான தேவனே அசைவாடுமே - 2
அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே - 2
வாரும் ஆவியே தூய ஆவியே
வாரும் ஆவியே தூய ஆவியே - 2
1. தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே - உம்
திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா - 2
2. ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே - என்
சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா - 2
3. தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே - என்
துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா - 2
746. ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே - 2
1. உலையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே - 2
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே - 2
2. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே - 2
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே - 2
3. ஆவியின் வரங்களினால் எம்மையும் நிப்பிடுமே - 2
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே - 2
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே - 2
அல்லேலூயா - 8
1. உண்மையின் ஆவி உயிருள்ள ஆவி
நீதியின் ஆவி நேர்மையின் ஆவி - 2
2. ஞானத்தின் ஆவி நேசத்தின் ஆவி
ஒளியின் ஆவி ஒற்றுமையின் ஆவி - 2
3. சாந்தத்தின் ஆவி சத்தியத்தின் ஆவி
வல்லமையின் ஆவி மீட்பின் ஆவி - 2
ஆவியிலே புதுமை அடைவோம் - அருள்
ஆழியிலே மூழ்கிக் களிப்போம்
இயேசுவுக்கு சான்று பகர்வோம் - அவர்
சாட்சிகளாய் வாழ்வை அமைப்போம் - 2
1. அன்பு என்னும் ஆடையணிவோம் - நல்ல
ஆனந்த அமைதி அடைவோம்
ஆதி சபை வாழ்க்கையினை ஆண்டவரின் ஆவியிலே
வீதியெங்கும் கண்டு களிப்போம் - நாம் - 2
2. வேதனையாம் அலைகள் ஓங்கலாம் - பெரும்
சோதனையாம் புயலும் வீசலாம்
இறைவன் நம்மைக் காக்கின்றார் இன்பமுற அழைக்கின்றார்
நிறைவாழ்வு இன்று அடைவோம் - நாம் - 2
3. பிரிவினையாம் நோய்கள் தீரும் - இனி
குறுகிய நம் பார்வை மாறும்
இறையரசின் கொடைகளையும் புனித அருங்குறிகளையும்
இல்லங்கள் கண்டு மகிழும் - நம் - 2
ஆவியை தா தூய ஆவியைத் தா
இயேசுவை உந்தன் ஆவியைத் தா - 2
1. தந்தையென் றழைத்திட ஆவியைத் தா
நிந்தையை அகற்றிட ஆவியைத் தா
உள்ளம் உருகிட ஆவியைத் தா
கள்ளம் அகன்றிட ஆவியைத் தா
2. ஞானம் நிறைந்திட ஆவியைத் தா
கானம் எழுப்பிட ஆவியைத் தா
பலமொழி பேசிட ஆவியைத் தா
பக்தியில் வளர்ந்திட ஆவியைத் தா
3. இறைவாக்குரைத்திட ஆவியைத் தா
இறையில் மகிழ்ந்திட ஆவியைத் தா
சான்று பகர்ந்திட ஆவியைத் தா
சத்தியம் விளங்கிட ஆவியைத் தா
4. உறவை வளர்த்திட ஆவியைத் தா
உன் புகழ் ஒங்கிட ஆவியைத் தா
பேய்கள் ஒட்டிட ஆவியைத் தா
நோய்களைப் போக்கிட ஆவியைத் தா
ஆவியைத் தாரும் இயேசுவே - தூய
ஆவியைத் தாரும் இயேசுவே
1. புத்துயிர் பெற்று நான் வாழ
புதுப் படைப்பாய் நான் மாற
2. எந்தன் தாகத்தைக் தீர்க்க
உயிருள்ள நீர் என்னில் சுரக்க
3. பாவக் கறைகளைக் கழுவ
பாவத் தளைகளை அறுக்க
4. மனத்தின் கவலையைப் போக்க
மகிழ்ச்சியால் எம்மை நிரப்ப
5. சாத்தானின் சேனையை வெல்ல
உமது புகழை நான் சொல்ல
ஆற்றல் தந்திடும் தூய ஆவியே
ஆட்கொள்ளும் எமை இந்த வேளையிலே
உறவுக்காக சாட்சியாக
உலகில் வாழ ஊக்கம் தந்திடுவாய்
1. அன்பும் பண்பும் மிளிர்ந்திட
ஆக்க சக்தியைத் தந்திடு
துன்புறும் மக்கள் வாழ்விலே
துணையாய் இருக்க உதவிடு - 2
2. மனித வாழ்வை உயர்த்திட
மனதில் உறுதியை வளர்த்திடு
நியாயமான வழியில் செல்ல
ஞான ஒளியைத் தந்திடு - 2
ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமா ஆகுமே - 2
1. மண்குடம் பொற்குடம் ஆகுமா ஆகுமே
குறைகுடம் நிறைகுடம் ஆகுமா ஆகுமே - 2
தண்ணீரும் திராட்சை இரசம் ஆகுமா ஆகுமே
திராட்சை இரசம் திரு இரத்தம் ஆகுமா ஆகுமே
2. செங்கடல் பாதையாய் ஆகுமா ஆகுமே
செத்தவர் உயிர்தெழல் ஆகுமா ஆகுமே - 2
சிங்கம் ஆடு நட்புறவு ஆகுமா ஆகுமே
சிறைவாழ்வு திருவாழ்வு ஆகுமா ஆகுமே
3. பாவிகள் மீட்பு பெறலாகுமா ஆகுமே
பாலைவனம் சோலைவனம் ஆகுமா ஆகுமே - 2
திருச்சபை ஓருடல் ஆகுமா ஆகுமே
திருச்சுதன் ஆவியால் ஆகுமே ஆகுமே
இருதயத்தில் வரம் தந்தாளும்
இஸ்பிரித்து சாந்தேகனே நாளும்
1. சருவ வுயிர்க்கும் தாயகமானவா - 2
சாட்சாதி சதா நித்யமானவா - 2
தானாய் நின்ற தற்சுயம் பானவா - 2
தருணம் வந்தருள் தந்திடுமென் தேவா - 2
2. திரித்துவத்தின் மூன்றாம் நாமதேயா - 2
சிஷ்டோர் மனம் பற்றிய தூயா - 2
சிநேகாக்கினி வீசும் நன்னேயா - 2
தேவகாருண்ய மேவு சகாயா - 2
3. மதிகுலத்தவர் துதி நிதம் செய்யும் - 2
வல்லோய் நிம்பை மாநகர் மீதுய்யும் - 2
மாந்தர் செழித் தோங்கத் தயை செய்யும் - 2
வரப்பிரசாதத்தின் மழை மிகப் பெய்யும் - 2
உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்றவேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே - 2
1. பெந்தகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழை போல் ஆவி ஊற்றினீh - 2
துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை - 2
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால் - 2
2. ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல்மொழியில் துதிக்க வேண்டுமே - 2
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும் - 2
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே - 2
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமய்யா
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே - 2
1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே - 2
வேதவசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே
2. கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே - 2
செய்த நன்மை நினைக்கவும்
நன்றியோடு துதிக்கவும்
சொல்லித் தாரும் ஆவியானவரே
எல்லா வரமும் நிரம்பித் ததும்பும்
திவ்ய ஸ்பிரித்து சாந்துவே
அடியோர் உள்ளத்தில் எழுந்தே வருவீர்
இனிய சிநேக தேவனே - 2
1. உலக இருளை அகற்ற உமது பரலோக ஒளி தாருமே - 2
உம்மைக் கண்டு நன்மை பெற நாதனே அருள் புரிகுவாய்
2. நன்மை பயக்கும் ஞானக் கொடைகள்
யாவும் அளிப்பாய் பரமனே - 2
நல்வழியை நாங்கள் கண்டு நற்கதி பெறச் செய்குவாய்
3. ஞானம் புத்தி விமரிசையுடன் அறிவு திடம் பக்தியும் - 2
தெய்வப் பயமான வரங்கள் ஏழும் எமக்கு ஈவாயே
ஸஸ நிரித நிஸ ஸநி தப பப மா தா தா
ஸஸ நிரித நிஸ ரிஸ நித பபம தா தா
க பா மா கரி பாம கரி ஸா கபா மா கரி ஸா
ஒளியூட்டும் இறையாவியே - என்றும்
வழிகாட்டும் நிறையுண்மையே
வழியறியா பேதை எந்தன் துயர் நீக்கி துணைபுரிவாய்
1. அருளாகி பொருளாகி உயிர்களுக்குள் உயிராகி
வாழ்வோடு போராடும் நலிந்தவர்க்குத் திடமாகி - 2
இருளகற்றும் ஒளியாய் நீ வா
மனக்குறை போக்கும் மருந்தாக வா - 2
வற்றாத கார்மழையே காலத்தின் அறிகுறியே
என் வாழ்வின் கருப்பொருளே வா
2. நீர் மீது அசைவாடி வையகத்தைப் புதிதாக்கி
பாவமென்னும் நோய்நீக்கி புதுவாழ்வின் ஊற்றாகி - 2
புதுப்படைப்பாய் எனை மாற்ற வா - எங்கும்
இறையாட்சி நிறைவேற்ற வா - 2
தென்றலிலே பேசிடுவாய் திசை எட்டும் பரவிடுவாய்
எம் மூச்சாய் விளங்கிடவே வா
ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செய்கின்றேன் - 2
1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னைத் தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்
கடவுள் ஆவியானவர்
ஆவியிலும் உண்மையிலும் அவரைத் தொழுவோம் - 2
ஆண்டவர்க்குப் புகழ் என்றும் பாடுவோம்
ஆர்ப்பரித்து ஆனந்தமாய் பாடுவோம் - 2
1. ஆவியான கடவுள் எங்கும் உள்ளார்
ஆலயத்தில் எழுவது நம்மில் வரவே - 2
ஆலயமாய் நம் உடலை மாற்றுவோம்
ஆண்டவரை எங்கும் சுமந்து செல்வோம் ஆண்டவர்க்கு...
2. உறுதி தரும் ஆவி நம்மில் மலரும்
தூய உள்ளம் நம்மில் உருவாகும் - 2
அருங்கொடைகள் யாவும் நம்மில் நிரம்பும்
ஆண்டவரின் சாட்சியாக வாழ்வோம் ஆண்டவர்க்கு...
தூய ஆவியே உந்தன் அருளை பொழிவாயே - 2
தூய ஆவியே உந்தன் ஆற்றல் தருவாயே - 2
1. அன்பின் சாட்சியாய் அமைதியின் தூதனாய் - 2
வாழ்ந்திட பணிபுரிந்திட - உம்
கனிகளால் எம்மை நிரப்புமய்யா - 2
உமது வல்லமையால் என்னை நிரப்பும் - 2
இறங்கி வாரும் இறங்கி வாரும் - 2
2. ஞானத்தில் வளரவும் துணிவில் திளைக்கவும் - 2
ஆற்றலே தூய ஆவியே - உம்
வரங்களால் எம்மை நிரப்புமய்யா - 2 - உமது....
தூய ஆவியே துணையாக வருவீர்
இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் - 2
1. மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர்
மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் - 2
2. மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர்
மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் - 2
3. தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர்
தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் - 2
4. பாவப் பிடிநின்று மீட்டிட வருவீh
பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் - 2
5. கல்மன இதயத்தைக் கரைத்திட வருவீர்
இதயத்தின் வெறுப்புகளை விலக்கிட வருவீர் - 2
தூய ஆவியே எழுந்தருள்வீர் வானினின் றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர் எளியவர் தந்தாய் வந்தருள்வீர்
நன்கொடை வள்ளலே வந்தருள்வீர் இருதய ஒளியே வந்தருள்வீர் - 2
2. உன்னத ஆறுதல் ஆனவரே ஆன்ம இனிய விருந்தினரே
இனிய தன்மையை தருபவரே உழைப்பில் களைப்பை தீர்ப்பவரே
வெம்மை தணிக்கும் குளிர்நிழலே அழுகையில் ஆறுதல் ஆனவரே
3. உன்னத பேரின்ப ஒளியே உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர் உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை நல்லது அளவில் ஏதுமில்லை
4. மாசு கொண்டதைக் கழுவிடுவீர் வறட்சியுற்றதை நனைத்திடுவீர்
காயப்பட்டதை ஆற்றிடுவீர் வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்
குளிரானதைக் குளிர்போக்கிடுவீர் தவறிப்போனதை ஆண்டருள்வீர்
5. இறைவா உம்மை விசுவசித்து உம்மை நம்பும் அடியார்க்கு
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர் புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர் அழிவில்லா இன்பம் அருள்வீரே
தூய ஆவியே வருக மனத்துணிவும் ஒளியும் தருக
நேயத் தந்தையின் கொடையே எங்கள் நெஞ்சில் என்றும் உறைக
1. அன்பின் ஊற்றே வருக இறை அன்பை எம்முள் பொழிக - 2
துன்பம் யாவும் தாங்க உம் துணையை எமக்கு அருள்க
2. தேற்றும் சுடரே வருக தினம் தெளிவும் அறிவும் தருக - 2
போற்றும் மனமே தருக உம் புகழே நாவில் திகழ
தேவதூய ஆவியே தேவரீர் வாரும் என்னில்
பாவ தங்கள் மாறியார் மைந்தர் எங்கள் நேயனே
வாரும் தூய ஆவியே வல்லவன் ஆவியே - 2
2. தேவுலகில் நின்று நும் திவ்விய பிரகாசத்தில்
பேரொளி போல் காந்தியை தேவரீர் வரவிடும் வாரும்...
3. ஞானம் புத்தி விமரிசை அறிவு திடமும் பக்தியும்
தெய்வபயம் ஆகிய வரங்கள் எங்கள் தேவையே வாரும்...
தேற்றிடும் தூய ஆவியே ஆற்றலும் ஆக்கமும் உடையவரே
இறைவனின் சாட்சியாய் விளங்கிடவே
உன்னருள் கொடைகளை வழங்கிடுவீர்
வருக வருக தேற்றிடும் தூய ஆவியே - 2
1. மனத்தின் தீமைகளை மன்னிக்க எழுந்தருள்வீர் - 2
மனத்தின் கீறல்களை மாற்றிட எழுந்தருள்வீர் வருக...
2. கல்மன இதயத்தைக் கரைத்திட எழுந்தருள்வீர் - 2
உண்மையின் வழிநடக்க கொடைகளைப் பொழிந்திடுவீர் வருக...
வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா இப்போது தாரும் தேவா
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை - 2
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - 2
1. இறுதி நாளில் எல்லோர் மேலும் ஆவியை பொழிவேன் என்றீர் - 2
மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே - 2
2. பெந்தகோஸ்து நாளின் போது பெரிதான முழக்கத்தோடு - 2
வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் - 2
வாரீர் படைத்திடும் தூய ஆவி
மக்கள் தம் இதயங்களில் சேரீர்
நிரப்பும் அருட்பிர சாதத்தால்
நீவிர் வழங்கின இதயங்களில்
2. தேற்றரவாளன் என்பவரே
சீரிய இறைவனின் திருக்கொடையே
வற்றா ஊற்றே அக்கினியே
வளரன்பே ஞானப் பூசுதலே
3. தகைக் கொடை ஏழுக்குரியவரே
தந்தை வலக்கரத் திருவிரலே
சகப்பிதா வாக்கினைக் காப்பவரே
சர்வ சொல்வரம் நாவில் நிறைப்பவரே
4. ஐம்புலன் களுக்கொளி மூட்டிடுவீர்
அன்பினை இதயத்தின் பாய்ச்சிடுவீர்
தெம்பிலா உடற் கழிவில்லாத
சீர்மிகு வலிமையை ஏற்றிடுவீர்
5. துரிதமாய் எம்பகை வரைவிரட்டி
சுருக்கமாய் சமாதானம் அருள்வீரே
வரும்வினை களிலிருந் தகன்றிடவே
வழிநடத்தும் தலைமை வகித்தே
6. உம் வழியாகத் தந்தையையும்
ஓர் சுதன் அவரையும் அறிந்திடவே
தம்பிரான் இருவரின் திருஆவி
தாமென விசுவசித் திடஉதவும்
7. தந்தை இறைவனுக் கும்மகிமை
தாழ்விடத் துயிர்த்த சுதனுக்கும்
இந்தத் தேற்றர வாளனுக்கும்
என்றென்றும் மகிமை பெருகிடுக - ஆமென்
வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2
1. மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும் - 2 யோர்தான்...
2. வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே - 2 யோர்தான்...
3. பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் - 2 யோர்தான்...
4. அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே - 2 யோர்தான்...
5. கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் - 2 யோர்தான்...
விண்ணகத் தந்தையின் விண்ணக கொடையாய்
விளங்கும் தூய ஆவியே எங்கள் எண்ணமும் செயலும்
உயர் அரும் கொடைகள் ஏழுடன் எம்முள் எழுந்தருள்வீர் - 2
1. அன்றொரு நாளில் அனற்பிழம்பாக
அப்போஸ்தலமே எழுந்தது போல - 2
இன்று எம் நெஞ்சில் வந்தருள்வீரே
இணையில்லா துணையைத் தந்தருள்வீர் - 2
2. பயமுடன் சோர்வும் பிணியும் நீங்க
பனிபோல் அருளை பரிவுடன் பொழிவீர் - 2
அயலவர்க்காக பணி பல ஆற்ற
ஆர்வமும் துணிவும் நல்கிடுவீர் - 2
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும் - 2
மூவொரு தேவனே வாரும் அன்பின் மூலப்பரமே வாரும் - 2
தேவாதி தேவனே வாரும் எங்கள் திரித்துவ தெய்வமே வாரும் - 2
என்றும் எந்தன் நடுவினிலே வாரும் என்னிறை ஏந்தலே வாரும் - 2
2. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும் - 2
உன்னத தெய்வமே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும்
நித்திய ஜீவனே வாரும் நெஞ்சில் நீங்கிடா நேசனே வாரும் - 2
ஆதிபரமே வாரும் என்றும் ஆட்சி செலுத்திட வாரும் - 2
3. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும் - 2
உண்மையின் உருவே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும் - 2
சத்திய தெய்வமே வாரும் அன்பின் சரித்திர நாயகா வாரும் - 2
எல்லாம் வல்ல திரித்துவமே வாரும் எங்கும் நிறைந்தவா வாரும் - 2
4. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும் - 2
ஆக்கமே ஊக்கமே வாரும் நெஞ்சின் ஆவலே ஏவலே வாரும் - 2
ஈசனே நேசனே வாரும் என்றும் ஈடில்லா இறைவனே வாரும் - 2
எத்திசையும் வாழ் இறையருளே இன்று எங்கள் நடுவிலே வாரும் - 2
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.