Showing posts with label General Articles. Show all posts
Showing posts with label General Articles. Show all posts

எவ்ளோ இன்ஸ்டாகிராம் சம்பாத்தியம் வருது தர்ஷா குப்தாக்கு


காற்றுள்ள போதே தூற்றிக்கொள் ன்னு சும்மாவா சொன்னாங்க  கெடச்ச வாய்ப்ப சரியா பயன்படுத்தி சம்பாதிக்கணும். வாய்ப்பே கெடைக்கலையா? நாமளே ஒரு வாய்ப்ப உருவாக்கி சம்பாதிக்கணும்ன்னு சொல்லாம சொல்லுது இந்த தர்ஷா பொண்ணு 

 எவ்ளோ சம்பாத்தியம் வருது இந்த பொண்ணுக்கு ல்ல. ...... ஆமா இந்த சம்பள காச கொடுக்குறது யாரு? ஆங்ங்ங் வேறாரு? அதிகமா 25 ஆம் தேதிக்குள்ள மாசச்சம்பளத்த காலி பண்ணிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி குடும்பம் நடத்துற நம்ம நடுத்தர பயலுக தான் அதுவும் அந்த 25ஆம் தேதிக்குள்ள லோண் கட்டுற மாதிரி தவறாம தர்ஷாவுக்கு கட்டிடுறானுக 


ஒண்ணு சொல்வாங்களே..... 

எங்கூட்டு புள்ளைக்கி ஒரு 2 ரூவா பலூன் வாங்கி குடுக்க துப்பில்ல ....ஆட்டக்காரிக்கு 500. ஓவா

பெண் உலகத்தின் ஆணிவேர் அவளை கொண்டாடுவோம்


இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
இது ராமாயணம்

ஓர் அழகிய இளம் மங்கை. 
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
 மனமுவந்து வாழ்கிறாள். 
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். 
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
 ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
  தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
இது நளாயினி கதை. 

இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்...

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. 
தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,
 தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. - 
இது சிலப்பதிகாரம்.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.
 அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை, 
ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.
 அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான். 
இது மணிமேகலை

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். 
அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.

 மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, 
'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று. 
யோசிக்கிறாள். 

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், 
"நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று. 
"அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல, 
சுற்றுகிறாள்.
 முதல் சுற்று, 
இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள். 
இது குண்டலகேசி

இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள். 

அவன் ஆணோ, கணவனோ,  அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,
அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள். 

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது. 

உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம். 

சங்ககாலத்திலேயே,  47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. 
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது. 

ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது. 

ஆண்டாண்டு காலமாக  பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்..

படித்ததில் பிடித்தது

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடல்


இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , 
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 

இப்பாடல் 
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
 
மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 
  மூட்டுக்கு முடக்கறுத்தான் 
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  
   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

ஒரு வருசத்துக்கு ஜியோ ஃபைபர் ஃப்ரீ தீபாவளி ஆபர்


ஒரு வருசத்துக்கு ஜியோ ஃபைபர் ஃப்ரீ. தீபாவளி ஆபர்னு சொல்லி மெசேஜ் வந்துச்சு. கன்ஃபார்ம் பண்ண 198 கஸ்டமர் கேருக்கு போன் பண்ணா "ஆமாங்க சார்"னு சொல்லுச்சு அந்த பாப்பா. 

'ஏற்கெனவே ஜியோ ஃபைபர் வச்சிருக்கிற எனக்கும் ஆஃபர் உண்டா, அல்லது புதுசா வாங்கினாதானா?' என்று கேட்டதற்கு "எல்லாருக்கும்தான் சார்"னு சொல்லுச்சு. 

எப்படி ஆக்டிவேட் பண்ணுறதுன்னு கேட்டப்போ, 'ரிலையன்ஸ் டிஜிட்டல்ல 20000 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கினால் 12 கூப்பன் கொடுப்பாங்க சார். அத ஒவ்வொரு மாசமும் பயன்படுத்திக்கலாம்'. 

அருமையான ப்ளானா இருக்கே எப்படிப் பாத்தாலும் வருசத்துக்கு ஜியோ ஃபைபர் ரீசார்ஜ் மட்டும் 9000 வரும். எப்படிப் பாத்தாலும் லாபம்தான்னு நினச்சு 'ஓக்கே மேடம் வாங்கிடலாம்'னு சொல்லும்போது 

"இருங்க சார்... மாசத்துக்கு ஒரு கூப்பன் ஆக்டிவேட் ஆகும். அப்படி ஆக்டிவேட் ஆகணும்னா ஒவ்வொரு மாசமும் ரிலையன்ஸ் டிஜிட்டல்ல போய் 15000 ரூபாய்க்கு பர்ச்சேஸ் பண்ணனும். இப்படி 12 மாசமும் போய் வாங்கினாத்தான் 12 மாசக் கூப்பனும் ஆக்டிவேட் ஆகி ஃப்ரீயா ஜியோ ஃபைபர் யூஸ் பண்ண முடியும் சார்" னு சொல்லுச்சு. ரொம்ப சந்தோசம்மா... அம்பானி மாம்ஸ கேட்டேன்னு மட்டும் சொல்லுங்க.

பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த இந்து பேராசிரியர்


பாகிஸ்தான் பிரிவினையை தீவிரமாக ஆதரித்த இந்து பேராசிரியர் லாகூரில் கொல்லப்பட்டது ஏன்?

பிரிஜ் நரேன் பாகிஸ்தானின் ஆதரவாளராக இருந்தார், எனவே அவர் அங்கேயே வசிக்க வேண்டியிருந்தது. 1947இல் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினை அறிவிப்புக்குப் பிறகு கலவரங்கள் வெடித்தபோது, ​​லாகூர் பொருளாதார நிபுணர் பிரிஜ் நரேன் நிக்கல்சன் சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்து, 'இது இப்போது பாகிஸ்தானின் சொத்து. எனவே கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்க வேண்டாம்' என்று கலவரக்காரர்களை அறிவுறுத்தத் தொடங்கினார்.

லாகூரில் வசித்த பேராசிரியர் பிரிஜ் நரேன், காலனித்துவ பஞ்சாபின் விவசாய பொருளாதாரம் குறித்த ஆய்வுகளுக்குப் பிரபலமானவர். அவர் 1888இல் பிறந்தார். இந்தியப் பிரிவினைக்கு முன்பு, லாகூரின் சனாதன் தர்மா கல்லூரியில் (பின்னர் எம்ஏஓ கல்லூரியாக மாறியது) பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தால் பொருளாதாரத்தில் கௌரவப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

"இந்திய துணைக்கண்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, '20ஆம் நூற்றாண்டின் சிறந்த பொருளாதார நிபுணர்களில்' ஒருவராகக் பேராசிரியர் பிரிஜ் நரேன் கருதப்பட்டார்" என்று டாக்டர் ஜி.ஆர். மதன் தனது 'Economic Thinking in India' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

அவர் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து விரிவுரை ஆற்றினார், மேலும் இந்தத் துறையில் 15க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். அவரது கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன.

ஆனால் ஜின்னாவின் 'இரு தேசக் கோட்பாட்டை' ஆதரிப்பதும், காந்திஜியை எதிர்ப்பதும் அவர் பிரபலமடைய ஒரு காரணமாக அமைந்தது. "பேராசிரியர் நரேன், காந்திஜியின் 'சர்க்கா பொருளாதாரத்தை' (Charkha Economics) வெளிப்படையாக எதிர்த்தார்" என்று டாக்டர் ஜி.ஆர். மதன் எழுதுகிறார்.

சர்க்கா பொருளாதாரம் என்பது மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய ஒரு சித்தாந்தமாகும். இது சுதேசி, தற்சார்பு மற்றும் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார அதிகாரமளிப்பில் கவனம் செலுத்தியது.

பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் கோபால் மிட்டல் தனது 'லாகூர் கா ஜோ ஜிக்ர் ​​கியா' என்ற புத்தகத்தில், "பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் பாகிஸ்தான் ஒருபோதும் பொருளாதார ரீதியாக நிலையானதாக இருக்காது என்றும் அதன் இருப்பு மிகவும் நிலையற்றதாக இருக்கும் என்றும் கூறியிருந்தனர், ஆனால் பேராசிரியர் பிரிஜ் நரேன் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற முடியும் என்ற கருத்தை ஆதரிக்கும் பல கட்டுரைகளை எழுதினார்" என்று கூறுகிறார்.

பாகிஸ்தானில் பிறந்த ஸ்வீடனை பூர்வீகமாகக் ொண்ட ஆராய்ச்சியாளர் இஷ்தியாக் அகமது, 'The Punjab Built, Partitioned and Cleansed: Unraveling the 1947 Tragedy through Secret British Reports and First-Person Accounts' என்ற தனது புத்தகத்தில், 1999ஆம் ஆண்டு டெல்லியில் சோம் ஆனந்த் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டுகிறார்: 'பேராசிரியர் பிரிஜ் நரேன் பாகிஸ்தானுக்கான கோரிக்கையை ஆதரித்து, பாகிஸ்தான் நடைமுறையில் ஒரு சிறந்த நாடாக இருக்கும் என்று உறுதியாக வாதிட்டார்.'

இந்தியப் பிரிவினையின் போது, ​​சுமார் 12 மில்லியன் மக்கள் புகலிடம் தேடி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு லாகூரில் உள்ள மாடல் டவுனில் தனது பெற்றோருடன் வசித்து வந்த சோம் ஆனந்த், "பேராசிரியர் பிரிஜ் நரேன் 'பாகிஸ்தான்' என்ற சித்தாந்தத்தின் 'தீவிர ஆதரவாளர்'" என்று கூறினார்.

பிரிஜ் நரேன் செய்தித்தாளுக்கான கட்டுரைகளை எழுதினார், அதில் அவர் "பாகிஸ்தான் ஒரு வெற்றிகரமான மற்றும் நிலையான நாடாக இருக்கும் என்ற கருத்தை நிரூபிக்க தனது பரந்த பொருளாதார அறிவைப் பயன்படுத்தினார்".

பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா அவரை அங்கேயே தங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், பாகிஸ்தானின் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க அவர் முழுமையாகத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

"ஜின்னா முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம உரிமைகள் உள்ள ஒரு ஜனநாயக அரசை நிறுவ விரும்பினார் என்று பிரிஜ் நரேன் உறுதியாக நம்பினார்."

"மே 1947 முதல், ஏராளமான இந்துக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் சுமார் பத்தாயிரம் பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். நிலைமை சீரடையும் என்றும், தங்களின் வேர்கள் பாகிஸ்தானில் இருந்ததால், அங்கேயே தங்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்" என்று சோம் ஆனந்த் கூறுகிறார்.

"ஆனால் ராட்க்ளிஃப் அவார்ட் (இந்தியாவில் இருந்து பாகிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடு) வெளிவந்தவுடன், சமூக விரோதிகள் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தொடங்கினார்கள். இது ஜின்னாவின் மதச்சார்பற்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்தது."

இருப்பினும், பேராசிரியர் நரேன் 'தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார், பாகிஸ்தான் தனது உண்மையான தாய்நாடு என்றும், எனவே தான் வெளியேற எந்த காரணமும் இல்லை என்றும் கூறினார்.'

குஷ்வந்த் சிங் தனது சுயசரிதையான 'Truth, Love and a Little Malice: An Autobiography'-இல், "லாகூரில் நடந்த கலவரங்களுக்கு சீக்கியத் தலைவர் மாஸ்டர் தாரா சிங் தான் காரணம் என்றும், அவர் பஞ்சாப் சட்டமன்றக் கட்டிடத்திற்கு வெளியே தனது பெல்ட்டிலிருந்து ஒரு கிர்பானை (குறுவாள்) ஆக்ரோஷமாக உருவி, 'பாகிஸ்தான் ஒழிக!' என்று கூச்சலிட்டார்" என்றும் எழுதியுள்ளார்.

அந்த நேரத்தில் லாகூரில் இருந்த குஷ்வந்த் சிங், அந்தச் செயல் "எண்ணெய் நிரம்பிய அறைக்குள் எரியும் தீக்குச்சியை வீசுவது போல இருந்தது. மாகாணம் முழுவதும் வகுப்புவாத கலவரங்கள் வெடித்தன" என்று எழுதுகிறார்.

பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் கோபால் மிட்டலின் கூற்றுப்படி, "கலவரங்கள் திட்டமிடப்பட்டதா அல்லது தானாகவே பரவியதா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் உள்ளன".

அவர் தனது 'லாகூர் கா ஜோ ஜிக்ர் ​​கியா' புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார், "ஆனால், கலவரங்கள் திட்டமிடப்பட்டிருந்தால், பாகிஸ்தானுக்குச் சொந்தமான பல கடைகள் மற்றும் வீடுகள் ஏன் எரிக்கப்பட்டன என்பது புரியவில்லை. கலவரக்காரர்கள் பேராசிரியர் பிரிஜ் நரேன் வாழ்ந்த குடியிருப்பைத் தாக்கியபோது, ​​அவரும் அதே வாதத்தை முன்வைத்து, அவர்கள் தீ வைப்பு மற்றும் கொலைகளைச் செய்வதைத் தடுக்க முயன்றார்."

லாகூரில் நடந்து கொண்டிருந்த கலவரத்தின் போது பேராசிரியர் நரேன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை ஆராய்ச்சியாளர் இஷ்தியாக் அகமது தனது புத்தகத்தில் விவரித்துள்ளார். சோம் ஆனந்தின் கூற்றை மேற்கோள் காட்டி, "ஒரு கும்பல் அவர் வாழ்ந்த பகுதியை அடைந்தது. அந்தக் கும்பல் காலியாக இருந்த இந்து மற்றும் சீக்கிய வீடுகளை எரித்து சூறையாடிக்கொண்டிருந்தது" என்று அவர் எழுதியுள்ளார்.

"நரேன் அவர்களிடம் சென்று, 'இதைச் செய்ய வேண்டாம், ஏனெனில் இது இப்போது பாகிஸ்தானின் சொத்து' என்றார். முதல் குழு அவரது வார்த்தைகளைக் கேட்டு வெளியேறியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மேலும் பல குண்டர்கள் வந்து தீ வைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினர். நரேன் மீண்டும் அவர்களிடம் சென்று அதையே திரும்பத் திரும்பச் சொன்னார்."

"ஆனால் அவர்களில் ஒருவர், 'அவர் ஒரு காஃபிர், அவரைக் கொல்லுங்கள்' என்று கத்தினார். அந்தக் கும்பல் அவர் மீது பாய்ந்தது, பாகிஸ்தானின் தீவிர ஆதரவாளர் கொடூரமாக கொல்லப்பட்டார்".

மற்ற வரலாற்றாசிரியர்களும் இந்த சம்பவத்தைப் பற்றி தங்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர். 'The Coffee House of Lahore: A Memoir 1942-57'-இல், வரலாற்றாசிரியர் கே.கே. அஜீஸ், "காங்கிரஸின் கூற்றுகளுக்கு மாறாக, பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக நிலையான நாடாக இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்த ஒரே இந்து அறிஞர் பேராசிரியர் பிரிஜ் நரேன் தான்" என்று எழுதுகிறார்.

"அவர் இதை தனது வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் பொதுக் கூட்டங்களிலும் அதையே கூறினார்."

"தனது வீட்டிற்கு தீ வைக்கும் நோக்கத்துடன் ஒரு கும்பல் வந்தபோது, ​​பிரிஜ் நரேன் வீட்டின் வாசலில் அவர்களை எதிர்கொண்டு, 'சில நாட்களில் இந்த வீடுகள் அனைத்தும் பாகிஸ்தானின் சொத்தாக மாறும் என்றும், அவற்றை சேதப்படுத்துவது உண்மையில் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்கும்' என்று கூறினார்" என்று கே.கே. அஜீஸ் எழுதுகிறார்.

"அவரது வார்த்தைகள் முதலில் வந்த கும்பலை அமைதிப்படுத்தியது, அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு கும்பல் கூடியது. இந்த முறை பேராசிரியரால் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார், அவரது நூலகம் சாம்பலாக்கப்பட்டது."

லாகூர் சனாதன் தர்மா கல்லூரி, எம்ஏஓ கல்லூரியாக மாறியது. இடமாற்றம் செய்யப்பட்ட கல்லூரி லாகூரில் உள்ள சனாதன் தர்மா கல்லூரியின் பேராசிரியர் பிரிஜ் நரேன் பாகிஸ்தானில் தங்க முடிவு செய்ததாகவும், 'அவர் சமத்துவத்தை நம்பிய ஒரு தீவிர முஸ்லிம் லீக் ஆதரவாளர்' என்றும் கோபால் மிட்டல் எழுதுகிறார்.

கோபால் மிட்டல் கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்தவர். ஆனால் அவர் லாகூரை தனது வீடாகக் கொண்டு, தனது பெரும்பாலான நேரத்தை தனது முஸ்லிம் சகாக்களுடன் கழித்தார்.

"பேராசிரியர் நரேனின் கொலை எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் எனது ஆசிரியர் மற்றும் எனது ஆளுமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்" என்று கோபால் மிட்டல் எழுதுகிறார்.

"எனது குடும்பத்தினர் லாகூரில் தங்குவதற்கு தயாராக இல்லை, அதன் பிறகு எனது எண்ணங்களும் மாறின. அமிர்தசரஸுக்குச் செல்லும் கடைசி குழு லாகூரிலிருந்து புறப்பட்டபோது, ​​நானும் ஒரு பேருந்தில் ஏறினேன். நாங்கள் அமிர்தசரஸை அடைந்தபோது, ​​எரிந்த வீடுகள் அங்கே தென்பட்டன. இங்கு வந்த பிறகு நான் வருத்தத்தால் சிறிது கண்ணீர் விட்டேன்."

'மக்கள் குழு ஒரு குழப்பமான நிலையில் பயணித்தது, ஆனால் அவர்களில் கொள்ளையர்களும் இருப்பது போல் தோன்றியது. ஒருவரின் பெட்டி காணாமல் போனது, ஒருவரின் படுக்கை காணாமல் போனது.' என கோபால் மிட்டல் எழுதியுள்ளார்.

கோபால் மிட்டலின் கூற்றுப்படி, 'பேராசிரியர் பிரிஜ் நரேன் உயிருடன் இருந்திருந்தால், பாகிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைப்படுத்தும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கான சாத்தியம் அதிகம், ஆனால் விதி இதை அங்கீகரிக்கவில்லை'.

பேராசிரியர் பிரிஜ் நரேனின் அஸ்தி, அவர் நேசித்த அதே பாகிஸ்தானின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் எழுதியுள்ளார்.

'1916இல் லாகூரில் நிறுவப்பட்ட சனாதன் தர்மா கல்லூரி, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் அம்பாலாவிற்கும், 1933இல் அமிர்தசரஸில் நிறுவப்பட்ட முகமதிய ஆங்கிலோ-ஓரியன்டல் (எம்ஏஓ) கல்லூரி, பாகிஸ்தானின் லாகூருக்கு, பேராசிரியர் பிரிஜ் நரேன் கற்பித்த அதே கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.'

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன்


சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் குண்டு வைத்து கொல்லப்பட்டது ஏன்?

தனக்கு வயதாகும் என்று மவுண்ட்பேட்டன் ஒருபோதும் நினைத்ததில்லை. சளி போன்ற சாதாரண உபாதையைத் தவிர, அவர் தனது வாழ்நாள் முழுவதும் வேறு எந்த நோயாலும் அவதிப்பட்டதேயில்லை.

70 வயதைத் தாண்டிய போதிலும், அவர் பிராட்லேண்டில் இருக்கும் போதெல்லாம், காலையில் இரண்டு மணி நேரம் குதிரை சவாரி செய்வார்.

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், அவரது சுறுசுறுப்பு சற்று குறைந்ததால், தனக்குப் பிடித்தமான போலோ விளையாட்டை விளையாடுவதைத் தவிர்த்தார் என்பதைத் தவிர, அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.

சோர்வடையும்போதும் அல்லது சலிப்படையும்போதும் உறங்குவது அவர் வழக்கம். ஆனால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அவரது விருப்பம் ஒருபோதும் குறையவில்லை.

குடும்பத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளித்துவந்த மவுண்ட்பேட்டன், ஒவ்வொரு கிறிஸ்துமஸையும் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் பிராட்லேண்ட்ஸில் கொண்டாடினார்.

ஈஸ்டருக்கு பிராபோர்னில் ஒன்றுகூடி மகிழும் மவுண்ட்பேட்டனின் குடும்பத்தினர், பெரும்பாலும் தங்கள் கோடைகாலத்தை அயர்லாந்தில் உள்ள கிளாசிபானில் கழித்தனர். மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார்
"மவுண்ட்பேட்டன் தனது பேரக்குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்" என்று பிரையன் ஹோய் 'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறைக் காட்டுவார் என்று அவரது பேரனின் தோழிகளில் ஒருவர் கூறுகிறார். அவர் தற்போதும் குடும்பத்தினர் அனைவராலும் நேசிக்கப்படுவராகவும், மதிக்கப்படுபவராகவும் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்" என்று பிரையன் ஹோய் எழுதுகிறார்.

"அவருடன் இருப்பது ஜாலியாக இருக்கும். அவர் உல்லாசமாக இருப்பார், ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை."

குழந்தைகளுடனான அவரது தொடர்புக்கு ஒரு காரணம், அவரே குழந்தையைப் போன்ற இயல்பைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.

மவுண்ட்பேட்டனின் பேரன் மைக்கேல் ஜான், "அவருக்கு அற்புதமான நகைச்சுவை உணர்வு இருந்தது. அவர் எங்களுடன் அமர்ந்து சார்லி சாப்ளின் படங்களைப் பார்க்கும்போது விழுந்து-விழுந்து சிரிப்பார்" என்று தெரிவித்தார்.

"அவர் அந்தப் படத்தை இதற்கு முன்பு பலமுறை பார்த்திருந்தாலும், மீண்டும் புதிதாக பார்ப்பதுபோலவே ரசித்து சிரிப்பார்."

ஐஆர்ஏவின் இலக்கான மவுண்ட்பேட்டன்
பணி ஓய்வுக்குப் பிறகு மவுண்ட்பேட்டன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை அரசு அறிந்திருந்தது.

1971ஆம் ஆண்டிலேயே, அவரது பாதுகாப்பிற்காக 12 போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.

தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிலிப் ஜீக்லருக்கு அளித்த பேட்டியில், "வடக்கு அயர்லாந்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தோழர்கள் சிலரை விடுவிக்க அயர்லாந்து குடியரசுப் படை (ஐ.ஆர்.ஏ) என்னைக் கடத்திச் செல்லக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது" என்று மவுண்ட்பேட்டன் கூறியிருந்தார்.

"ஒரு சோதனையில், ஐஆர்ஏ கொல்ல விரும்பிய 50 பேர் கொண்ட பட்டியலில் மவுண்ட்பேட்டனும் இருப்பது தெரியவந்தது," என்று ஆண்ட்ரூ லூனி தனது "The Mountbattens: Their Lives and Loves" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"70களின் முற்பகுதியில் க்ளோசிபனில் மவுண்ட்பேட்டனைக் கொல்ல ஒரு திட்டம் இருந்ததாக ஒரு மூத்த ஐ.ஆர்.ஏ உறுப்பினர் உறுதிப்படுத்தினார், ஆனால் பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அது செயல்படுத்தப்படவில்லை." என ராயல் மிலிட்டரி காவல்துறை அதிகாரியான கிரஹாம் ஜோயல், ஆண்ட்ரூ லூனியிடம் கூறினார்

"ஆகஸ்ட் 1976இல் மவுண்ட்பேட்டனை சுடுவதற்கான முயற்சி கைவிடப்பட்டது, ஏனெனில் அலைபாயும் கடல் பகுதியில் ஐ.ஆர்.ஏ ஆயுததாரிகளால் துல்லியமாக குறிவைத்து சுடமுடியவில்லை."

1979 மார்ச் மாதத்தில், நெதர்லாந்திற்கான பிரிட்டன் தூதர் சர் ரிச்சர்ட் சைக்ஸ் மற்றும் எம்.பி. எரிக் நீவ் ஆகியோர் ஐ.ஆர்.ஏ-வால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் நேட்டோ தலைவர் ஜெனரல் அலெக்சாண்டர் ஹெய்கை பெல்ஜியத்தில் படுகொலை செய்ய ஐ.ஆர்.ஏ முயற்சித்தது, ஆனால் அவர் மயிரிழையில் மரணத்திலிருந்து உயிர் தப்பினார்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகுதான், தலைமை காவல்துறை கண்காணிப்பாளர் டேவிட் பிக்னெல், அயர்லாந்துக்கு செல்ல வேண்டாம் என்று மவுண்ட்பேட்டனுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவர், 'அயர்லாந்து மக்கள் எனது நண்பர்கள்' என்று கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய பிக்னெல், 'எல்லா அயர்லாந்து மக்களும் உங்கள் நண்பர்கள் அல்ல' என்று சொன்னார்.

எனவே, பிக்னெலின் அறிவுரையின்படி, குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை இரவில் உறங்கும்போதும் அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கினார் மவுண்ட்பேட்டன்

"ஜூலை 1979 இல், அவருக்கு ஏற்படவுள்ள ஆபத்தை மதிப்பிட்ட கிரஹாம் ஜோயல், 'ஷேடோ ஃபைவ்' சொகுசு படகில் பயணிப்பது மவுண்ட்பேட்டனுக்கு ஆபத்தை அதிகரிக்கும், ஏனெனில் இரவில் யாரும் சப்தமில்லாமல் அதில் ஏறிவிடமுடியும் என்று கூறினார்'' என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார்

"பெல்ஃபாஸ்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கார் பல முறை கடற்கரையை நெருங்கி வருவதைக் கண்டதால் அவர்களுக்கு கவலை ஏற்பட்டது. ஒரு முறை, காரில் உள்ளவர்களை பைனாகுலரைப் பயன்படுத்தி பார்க்க ஜோயல் முயன்றார்."

''மவுண்ட்பேட்டனின் படகை ஒரு மனிதன் தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருப்பதை ஜோயல் கண்டார். படகிலிருந்து சுமார் 200 கெஜம் தொலைவில் சந்தேகத்திற்குரிய நபர் இருந்திருக்க வேண்டும்."

பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் லார்ட் மவுண்ட்பேட்டன் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார்
மவுண்ட்பேட்டனின் படகில் பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லை
ஜோயலின் எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரது அறிக்கை புறக்கணிக்கப்பட்டு மவுண்ட்பேட்டனின் பாதுகாப்பு அயர்லாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1979 ஆகஸ்ட் 27ஆம் நாள் பிரிட்டன் முழுவதும் விடுமுறை நாளாக இருந்தது.

பல நாட்கள் மழைக்குப் பிறகு சூரியனைப் பார்த்த மவுண்ட்பேட்டன், காலை உணவின் போது தனது குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்,'ஷேடோ ஃபைவ்' படகில் சவாரி செய்ய தன்னுடன் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று அவர் கேட்டார்.

படகுத்துறைக்குச் செல்வதற்கு முன், மவுண்ட்பேட்டன் பயணத்திட்டத்தை தனது பாதுகாப்புப் பணியாளர்களிடம் விளக்கினார்.

பைனாகுலர் மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியாளர்கள், தங்கள் காரை படகுத்துறையில் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

மவுண்ட்பேட்டனுக்கு பாதுகாவலாக வந்த காவலர்களில் ஒருவர் கடல் அலைகளினால் வாந்தி எடுக்கத் தொடங்கினார். எனவே, பாதுகாவலர்கள் யாரும் தங்களுடன் படகில் வரத் தேவையில்லை என்று மவுண்ட்பேட்டன் கூறிவிட்டார்.

'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற தனது புத்தகத்தில், ''படகில் அமர்ந்தவுடன் மவுண்ட்பேட்டன் படகின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்'' என்று பிரையன் ஹோய் எழுதியுள்ளார்

படகின் அடிப்பாகத்தில் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது என்றும், அதில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் வெடிபொருட்கள் இருந்ததாகவும் பின்னர் ஐ.ஆர்.ஏ கூறியது.

அயர்லாந்தை பிரிட்டன் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்கத்தை முக்கியமாக கொண்டிருந்த அமைப்பு ஐஆர்ஏ ஆகும் மவுண்ட்பேட்டனின் படகு 'ஷேடோ ஃபைவ்' காலை 11:30 மணிக்கு 'ஷேடோ ஃபைவ்' படகு நகரத் தொடங்கியது. படகு சென்றுக் கொண்டிருந்தபோது, கடற்கரையோர சாலையில் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் காரில் பயணித்துக் கொண்டே பைனாகுலர் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றதும், மேலும் இரண்டு ஜோடி கண்கள் படகை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை, ஐ.ஆர்.ஏ உறுப்பினர்களுடையவை.

அந்த தருணத்தைப் பற்றி பிரையன் ஹோய், "ஷேடோ ஃபைவ் படகின் நடுவில் மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தனர், லார்ட் மவுண்ட்பேட்டன் படகை ஓட்டிக்கொண்டிருந்தார், படகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருப்பதை ஐ.ஆர்.ஏஆட்களால் தெளிவாகக் காண முடிந்தது." என எழுதியுள்ளார்

"படகில் வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்யும் ரிமோட் கண்ட்ரோல் சாதனம், கொலையாளிகளில் ஒருவரிடம் இருந்தது."

'ஷேடோ ஃபைவ்' படகு, படகுத்துறையிலிருந்து கிளம்பிய 15 நிமிடங்களில் சரியாக காலை 11:45 மணிக்கு, கொலையாளிகளில் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் பொத்தானை அழுத்தினார்.

படகில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ வெடிபொருட்கள் பெரும் ஓசையுடன் வெடித்தன, படகு துண்டு துண்டாகச் சிதறியது.

அந்த நாளை நினைவுகூர்ந்த மவுண்ட்பேட்டனின் மகள் பாட்ரிசியா, "நான் என் மாமியார் லேடி பிராபோர்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்,அப்போது நியூ ஸ்டேட்ஸ்மேனின் சமீபத்திய இதழைப் படித்துக்கொண்டிருந்தேன்."

"கையிலிருந்த நியூ ஸ்டேட்ஸ்மேனை படிப்பதற்காக என்னுடைய தலை குனிந்திருந்தது. ஒருவேளை அதனால்தான் குண்டு வெடித்தபோது, என் கண்களுக்கு சேதம் குறைவாக ஏற்பட்டதோ என்று நினைக்கிறேன்."

"என் தந்தையின் கால்களுக்கு அருகில் டென்னிஸ் பந்து ஒன்றின் அளவுள்ள ஏதோ ஒன்று இருந்ததாக எனக்கு தோன்றியது, அது மிகவும் பிரகாசமான ஒளியை வெளியிட்டது. அடுத்த கணம் நான் தண்ணீரில் விழுந்து மூழ்கிக் கொண்டிருந்தேன் என்பது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

மவுண்ட்பேட்டனின் மருமகன் லார்ட் பிராபோர்ன் படகின் நடுவில் நின்று கொண்டிருந்தார். குண்டு வெடித்தபோது, அவரது உடலின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், அவரது முகத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை.

குண்டு வெடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அவர் தனது மாமனாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் தானே?" என்று கேட்டார்.

இந்த வார்த்தைகள்தான் மவுண்ட்பேட்டன் கேட்ட கடைசி வார்த்தைகளாக இருக்கலாம்.

"மாமாவிடம் இந்தக் கேள்வியை கேட்ட அடுத்த கணம் நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தேன், மிகவும் குளிராக இருந்தது. என்னை எப்படி மீட்டார்கள் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை" என்று லார்ட் பிராபோர்ன் நினைவு கூர்ந்தார்.

படகின் இடிபாடுகளிலிருந்து சிறிது தொலைவில் மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

"மவுண்ட்பேட்டனின் கால்கள் அவரது உடலில் இருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுவிட்டன. அவர் அணிந்திருந்த 'HMS கெல்லி' என்று எழுதப்பட்டிருந்த முழுக் கை ஜெர்சியைத் தவிர, அவரது உடலில் இருந்த அனைத்து ஆடைகளும் கிழிந்திருந்தன." என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார்

"அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பொதுமக்களின் கவனத்தைத் தவிர்ப்பதற்காக, ஆம்புலன்ஸ் வரும் வரை அவரது உடலை படகு ஒன்றில் வைத்திருந்தோம்" என்று அவர் எழுதுகிறார்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த டாக்டர் ரிச்சர்ட் வாலஸ், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார், "வெடிப்புச் சத்தத்தைக் கேட்டபோது, அது ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை."

"நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, தண்ணீரில் பலர் விழுந்திருந்ததைக் கண்டோம். எங்கள் முதல் பணி உயிருள்ளவர்களிடமிருந்து இறந்தவர்களைப் பிரிப்பதாகும்."

"மருத்துவர்களாக, இறந்தவர்களை விட உயிர் பிழைத்தவர்கள் மீது கவனம் செலுத்துவதே எங்களது கடமையாக இருந்தது. மவுண்ட்பேட்டனின் சடலத்துடன் நாங்கள் படகுத்துறையை அடைந்தபோது, எங்களுக்கு உதவ பலர் முன்வந்தனர்" என்று அவர் கூறுகிறார்.

"ஒரு கதவை உடைத்து தற்காலிக ஸ்ட்ரெச்சர் ஒன்று உருவாக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு கட்டுப் போடுவதற்காக பெண்கள் துணிகளைக் கிழித்துக் கொடுத்தனர்," என்று டாக்டர் வாலஸ் கூறினார்.

"நாங்கள் மவுண்ட்பேட்டனின் உடலைக் கரைக்குக் கொண்டு வந்தபோது, அவரது உடலின் பல பகுதிகளில் வெட்டுக் காயங்களும் காயங்களும் இருந்தன, ஆனால் அவரது முகம் சிதைவடையாமல் சாதாரணமாக இருந்தது."

மவுண்ட்பேட்டன் இறந்த செய்தி கிடைத்தவுடன், டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கடைகளும் மூடப்பட்டன. அவரது மறைவையொட்டி இந்தியாவில் ஏழு நாட்களுக்கு 'அரசு துக்கம்' அறிவிக்கப்பட்டது.

1979 செப்டம்பர் 5ஆம் நாளன்று, அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 1400 பேர் முன்னிலையில் நடைபெற்றது. பிரிட்டன் ராணி, இளவரசர் சார்லஸ், ஐரோப்பிய மன்னர்கள் பலர், பிரதமர் மார்கரெட் தாட்சர் மற்றும் நான்கு முன்னாள் பிரதமர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் மவுண்ட்பேட்டன் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர். மவுண்ட்பேட்டனின் கொலைக்கு பொறுப்பேற்ற அயர்லாந்து குடியரசுப் படை (Provisional IRA) ஒரு அறிக்கையை வெளியிட்டது.

79 வயது முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொலையை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்பதற்கான விளக்கத்தை ஐ.ஆர்.ஏ ஒருபோதும் தரவில்லை.

மவுண்ட்பேட்டனின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பிலிப் ஜீக்லர், "மவுண்ட்பேட்டனின் கொலை நடந்த அதே நாளில் அயர்லாந்தில் 18 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டதும், இந்த முடிவு ஐஆர்ஏவின் உயர் மட்டங்களில் எடுக்கப்பட்டதை உணர்த்துகிறது" என எழுதுகிறார்

"நமது நாட்டை தொடர்ந்து ஆக்ரமித்திருப்பது தொடர்பாக பிரிட்டிஷ் மக்களின் கவனத்தை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்" என்று ஐஆர்ஏ தனது செய்திக்குறிப்பில் கூறியிருந்தது.

மவுண்ட்பேட்டனின் படுகொலைக்குப் பிறகு, ஐஆர்ஏவின் பிரசாரத்திற்கான பொதுமக்களின் ஆதரவு குறைந்தது.

அதே நேரத்தில், பிரிட்டனின் பிரதமரான மார்கரெட் தாட்சர், ஒரு அரசியல் அமைப்பு என்ற நிலையில் இருந்து ஐ.ஆர்.ஏவை நீக்கி, அதை குற்றவியல் அமைப்பாக அறிவித்தார். மேலும், அவர் ஐ.ஆர்ஏ போராளிகளுக்கு வழங்கப்பட்ட போர்க் கைதி என்ற அந்தஸ்தையும் திரும்பப் பெற்றார்.

குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரங்களுக்குள், கொலையாளிகளைப் பிடிக்க அயர்லாந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினார்கள், இது அவர்களுடைய வரலாற்றில் மிகப்பெரிய விசாரணை என்று கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு, பிரான்சிஸ் மெக்கேர்ல் (24), தாமஸ் மெக்மஹோன் (31) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

1979 நவம்பர் 23ஆம் நாளன்று, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சந்தேகத்தின் பலனை மெக்கேர்லுக்கு வழங்கி அவரை விடுவித்தது. இரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் மவுண்ட்பேட்டனைக் கொலை செய்ததாக மெக்மஹோன் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டது.

தாமஸ் மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் 1998இல் 'குட் ஃப்ரைடே' ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். அவர் மவுண்ட்பேட்டனை கொலை செய்ததற்காக மொத்தம் 19 ஆண்டுகள் பிரிட்டன் சிறையில் கழித்தார்.

புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் முறை


புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் முறை
கொடிவகை பயிர்களுக்கு புண்ணாக்கு கரைசல் தயாரித்து பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்கும் முறை 
தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் :
தேங்காய் புண்ணாக்கு 5 கிலோ
வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ
பருத்திக் கொட்ட புண்ணாக்கு 5 கிலோ 
செய்முறை 
மூன்று புண்ணாக்கையும் ஒரு டிம்பில் கொட்டி நன்கு முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 4 நாட்களுக்கு ஊற விட வேண்டும். நான்கு நாட்கள் கழித்து அசோஸ்பைரில்லம் 2 கிலோ> சூடோமோனஸ் 2 கிலோவையும் அதில் கொட்டி தண்ணீர் ஊற்றி கறைத்து திரும்ப 4 நாட்களுக்கு ஊற விட வேண்டும். அதன் பிறகு அதில் 2 லிட்டர் கியூமிக் கரைசலை அதில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு காலை அல்லது மாலை நேரத்தில் தண்ணீர் பாயும் சமையத்தில் செடிகளுக்கு ஊற்றி விடலாம் 
பயன்கள்
செடி இது ஒரு வளர்ச்சி ஊக்கி மாதிரி செயல்படும் செடி விரைவாக வளரும் 
வேர் வளர்ச்சி அதிகரிக்கும். பூ , பிஞ்சு அதிகம் பிடிக்கும். காய்கள் நல்ல தரமானதாக இருக்கும்.

கணவன் மனைவி உறவில் போட்டி இருக்கக்கூடாது


உறவில் போட்டி இருக்கக்கூடாது.....

கணவன் - மனைவி உறவு என்பது இந்த உலகத்திலேயே ரொம்ப அற்புதமான, உன்னதமான ஒரு உறவு! அதில் நீயா - நானா என்ற போட்டி இருக்கக் கூடாது.
நீயும் நானும் என்று இருக்க வேண்டும்..

குடும்பத்தில் சண்டை வந்தாலும் உங்களால் சமாதானமாக இருக்க முடியும். குடும்பம் என்ற தோட்டத்தில் தென்றல் வீசுமா, புயல் அடிக்குமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். எப்படி?

இரண்டு பேரும் ஏட்டிக்குப்-போட்டி பேசிக்கொண்டே இருந்தால்தான் சண்டை வரும்; யாராவது ஒருவர் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். கோபத்தில் கத்தினால், யாருமே உங்களை மதிக்க மாட்டார்கள். அதனால், உங்கள் கோபத்தை கிளறினாலும் பதிலுக்கு பதில் பேசாதீர்கள். யார் பேசி ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை, சண்டை இல்லாமல் சந்தோஷமாக இருப்பதுதான் முக்கியம்.

ஒருவர் பேசும்போது குறுக்க குறுக்க பேசாதீர்கள்; பொறுமையாக கேளுங்கள். அப்படி செய்தால் சண்டையை மறந்து சீக்கிரமாக சமாதானம் ஆகிவிடலாம். எதையோ மனதில் வைத்துதான் இப்படி பேசுகிறார்கள் என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள். உண்மையிலேயே அவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “

கோபம் வந்தால் அமைதியாக அந்த இடத்தைவிட்டுப் போய்விடுங்கள். ஒருவேளை, வேறொரு ரூமுக்கு போகலாம், கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வரலாம். ஆனால் அப்படி போவதால், “ஓடி ஒளியிறீங்க”, “முகத்தை தூக்கி வெச்சிக்கிறீங்க”, “பிடிவாதமா இருக்கீங்க” என்று அர்த்தமில்லை. அந்த மாதிரி நேரத்தில், கடவுளிடம் மனம்விட்டு பேசுங்கள்; பொறுமையாக இருப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் அவரிடம் உதவி கேளுங்கள்.

வெடுக்-வெடுக்கென்று பேசினால் பிரச்சினை இன்னும் பெரிதாகும். ஆறுதலாகப் பேசினால், புண்பட்ட மனதிற்கு மருந்து போடுவது போல இருக்கும். அவர்களுடைய மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள், அவர்களிடமே கேளுங்கள்.

 நீங்கள் கத்தினால், பிறகு அவர்களும் கத்துவார்கள். உங்கள் மனம் காயப்பட்டிருந்தாலும் குத்தலாக பேசாதீர்கள், திட்டாதீர்கள். ‘என்மேல உங்களுக்கு கொஞ்சம்கூட அக்கறையே இல்லை’, ‘நான் சொல்றதை ஒருநாளாவது கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லாதீர்கள். ‘நீங்க இப்படி சொன்னது எனக்கு கஷ்டமா இருந்தது’ என்று பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் கைநீட்டி அடிக்காதீர்கள். அதேமாதிரி, தரக்குறைவாக பேசாதீர்கள், பட்டப்பெயர் வைத்து கூப்பிடாதீர்கள், மிரட்டாதீர்கள்.

உங்கள் மனதை காயப்படுத்தியிருந்தால், அதைப் பற்றியே யோசிக்காதீர்கள். நடந்ததையே நினைத்துக்கொண்டிருந்தால் சண்டையை மறந்து சமாதானமாக முடியாது. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும். அதனால், சமாதானமாவதற்கு உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள்.

“என்மேல எந்த தப்பும் இல்லையே!” என்று நீங்கள் நினைக்கலாம்; ஒருவேளை, கோபம் வருவது போல நீங்கள் ஏதாவது பேசியிருக்கலாம்... யோசிக்காமல் எதையாவது செய்திருக்கலாம்... அதற்காக மன்னிப்பு கேளுங்கள், நீங்களும் மன்னியுங்கள். கணவன்-மனைவி உறவு என்பது இந்த உலகத்திலேயே ரொம்ப அற்புதமான ஒரு உறவு! அதில் நீயா–நானா என்ற போட்டி இருக்கக் கூடாது.

கணவன் மனைவி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க


கணவன் மனைவி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்

கணவன் மனைவி இருவருக்குமிடையில் திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. நமது பெரியவர்கள் கூட "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். 

இதற்கு காரணம், சரியான பரஸ்பர புரிதல் இல்லாமையே. புரிதல் இல்லாத நிலை தொடர்ந்தால் விவாகரத்து வரைக்கும் கூட செல்ல நேரிடும் . குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை வரும். அப்படி ஒரு நிலை வராமல் எப்படி தவிர்ப்பது என்பது பற்றி பார்ப்போம். ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள் சில ...

1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்னகையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை.

2. வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம். வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா செல்லலாம்.

3. இருவரில் ஒருவர் தவறு செய்திருப்பின் அடுத்தவர் முன்னிலையில் அதனை சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்தாமல் தனிமையில் சுட்டிக்காட்டி விளக்கலாம்.

4. அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து ஆச்சர்யப்படுத்துங்கள்.

5. எப்போது பார்த்தாலும் செல்போனை நோண்டிக்கொண்டு அல்லது டிவி பார்த்துக்கொண்டோ இருக்காமல், கூடுமானவரை ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசுங்கள்.

6. சமையல் முதல் EB பில் கட்டுவது என அனைத்து வேலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்.

7. சாப்பிடும் தருணங்களில் டிவி யில் கவனம் திருப்பாமல், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே சமையலை ருசித்து சாப்பிடுங்கள். அது எதிர் தரப்பினரை திருப்தியடையச் செய்யும்.

8. தனிமையான தருணங்களில் இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தலைகோதிவிடுவது, மடியில் தலை வைத்துப்படுப்பது, கை கோர்த்துக்கொள்வது போன்ற தொடுதல்கள் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

9. எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்ற எதிர்காலக் கனவுகள் பற்றி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுங்கள்.

10. I love you அல்லது I miss you போன்ற க்ரீட்டிங் கார்டுகளை அவ்வப்போது பரிமாறிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது SMS. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இப்படி SMS அனுப்புங்கள்.

11. ஒருவரின் தேவைகள் என்னவென்று மற்றொருவர் கேட்கும் முன்பே, அதனைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுங்கள்.

12. வாதம் செய்யும்போதோ, அறிவுரை கூறும்போதோ, ஒருவர் சொல்வதை மற்றொருவர் கூர்ந்து கவனிக்க வேண்டும் சரியானதாக இருப்பின் ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

13. தனக்குப் பிடித்த விஷயங்களை இன்னொருவர் செய்யும்போது மனம் விட்டுப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பாராட்டுதல் அன்பை மேலும் வலுப்படுத்தும்.

14. ஏதாவது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மற்றொருவரின் பார்வையில் இருந்தும் பார்த்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தன் வாதம் தான் கடைசியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.

15. வெளியூரில் இருந்தால், அலைபேசி மூலம் அவ்வப்போது பேசி அக்கறையை வெளிக்காட்டுங்கள்.

16. தங்கள் விருப்பங்களை மற்றொருவர் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அவசரப்படுத்தாதீர்கள். பொறுமை அவசியம். அதே போன்று நீ இப்படித் தான் இருக்க வேண்டுமென தன்னுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிக்கவும் கூடாது.

17. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங்கள். சுய விருப்பு வெறுப்புக்களை தெரிந்துவைத்துக்கொள்வது மிக முக்கியம்.

18. எந்த சூழ்நிலையிலும் அவரவர்க்குரிய சுய மரியாதையை கெடுக்கும் வண்ணம் நடக்கக் கூடாது. நண்பர்கள் உறவினர்கள் போன்ற வெளியாட்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்ளுதல் கூடவேகூடாது.

19. பிறந்த நாள், திருமணநாள் போன்ற நாட்களை மறந்துவிடாமல் பரிசுப்பொருட்கள் தந்து ஒன்றாக நேரத்தை செலவழியுங்கள்.

20. தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், தன் மேலுள்ள குறைகளையோ அல்லது தவறுகளையோ ஒத்துக்கொண்டு மனமார மன்னிப்பு கேட்கப் பழகுங்கள்.

21. கணவனோ மனைவியோ தம்மிடம் தவறினை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும்போது அவரைக் குத்திக்காட்டாமல் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டு சகஜநிலைக்குத் திரும்புங்கள்.

22. தினமும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுங்கள். முத்தம் என்பது காமம் சார்ந்த விஷயமல்ல, அது காதலை வெளிப்படுத்தும் நிலைப்பாடு.

23. வீட்டில், குழந்தைகளுக்கு எதிரில் சண்டையோ வாக்குவாதமோ வைத்துக்கொள்ளாதீர்கள். குழந்தைகளிடமும் தன்மையாக இனிமையாகப் பேசுங்கள், பழகுங்கள்.
    
24. குழந்தைகளின் படிப்பு, எதிர்காலதிட்டம் ஆகியவற்றை இருவருமே கலந்து ஆலோசனை செய்யுங்கள். 

25. ஏதேனும் சந்தர்ப்பங்களில் பலவீனமாக உணர்ந்தீர்களானால் அதை தாராளமாக தன் துணையிடம் தெரிவித்து அவருடைய உதவியை ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ளலாம்.

26. உங்கள் இருவருக்குள் நடந்த சுவாரஸ்யமான கடந்தகால காதல் சம்பவங்களை அவ்வப்போது நினைவுபடுத்தி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். இது அன்பு குறையாமல் இருக்க உதவும்.

27. மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும். உடல் சார்ந்த நேரங்களில் கூட, காமத்தை விட காதல் பிரதானமாக இருக்க வேண்டும்..

28. சாதாரணமாக கை பிடித்து நடக்கும்போது கூட உனக்காக நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை அந்த பிடி ஏற்படுத்த வேண்டும்.

29. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும்போது, உதாரணமாக தலைவலி என்று சொன்னால் “எனக்கு அதுக்கு மேல வலிக்குது“ என்று பதிலளிக்காதீர்கள். உண்மையான அக்கறையுடன் பணிவிடை செய்யுங்கள்.

30. கணவனோ/மனைவியோ அடுத்தவரின் குடும்பத்தாரை குறைக்கூறாதீர்கள். அது உங்களது குடும்பத்தினர் மீது அவருக்கு துவேஷத்தை ஏற்படுத்தும். 

31.  ஒருவருக்கொருவர் அனாவசியமாக சந்தேகப் படாதீர்கள். 

32. ஒருவருக்கொருவர் காதலை வெளிக்காட்ட தயங்காதீர்கள். மனதிற்குள் வைத்து ஒளிக்கும் காதல் எதற்கும் பிரயோஜனப்படாது.

33. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆன்மிக உணர்வுக்கு உரிய மதிப்பளியுங்கள். இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பிட்ட கடவுளை வணங்கும்படியோ/ குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும்படியோ உங்கள் துணையை வற்புறுத்தாதீர்கள்

விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும் அன்னியோன்னியத்தை  வலுப்படுத்தும் ஆயுதங்கள். ஒருவருக்கொருவர் அவமானமோ வெட்கமோ பார்க்காமல் வெளிப்படையாக இருத்தல், ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி பகிர்தல் போன்றவைகள் கணவன் மனைவி உறவினை மேலும் வலுப்படுத்தும். விட்டுக்கொடுப்பதால் உங்களின் உறவு கெட்டுவிடாது ..!!!
அது மேலும் இறுகி கெட்டிப்படும்..!!!

மது மாது போதையை விட மிகவும் மோசமான போதை மொபைல் போன்


மது மாது போதையை விட மிகவும் மோசமான போதை மொபைல் போன்,.. 
மதுவுக்கும் மாதுவுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தான் அடிமையாவர்கள். 
ஆனால் இந்த மொபைல் போனுக்கு  வயது வித்தியாசம் கிடையாது 
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் இதற்கு அடிமை.. 
தூங்கும் போதும் போன் தான், தூக்கத்தில் எழுந்தாலும் போன தான். 

மது மாது போதையை விட மிகவும் மோசமான போதை மொபைல் போன்
மது மாது போதையை விட மிகவும் மோசமான போதை மொபைல் போன்


ரோட்டில் நடந்து போகும்போதும் போன் தான்..   வண்டியில் போகும் போதும் போன் தான்.. 
சின்ன குழந்தைகள் பள்ளிக்கூடம் போயிட்டு வந்த உடனே கையில் எடுப்பது போன் தான்... 
இந்த நோயை கட்டுப்படுத்தவும் முடியாது கட்டி காக்கவும் முடியாது. 
ராப்பகலா உழைத்த காலம் போய் இராப்பகல மொபைலின் ஒன்றும் காலம் வந்துவிட்டது.
இந்த போனால் சில பெண்களும் ஆண்களும் கெட்டு குடும்பங்களும் கெட்டு கண்களும் கெட்டுப் போகி விடுகிறது

80கள் தான் எவ்வளவு எளிமையானது


80கள் தான் எவ்வளவு எளிமையானது....

தேன் மிட்டாய்ல தேன் இருக்கும்னு நம்பிக்கிட்டு...

Bigfun சுவிங்கம்ல வர்ற கிரிக்கெட் ஸ்டிக்கர் எல்லாம் சேத்து வச்சா வேர்ல்ட் கப் கூட்டிட்டு போவாங்கன்னு காத்துகிட்டு... 

என்ன ஆபத்து வந்தாலும் சக்திமான் வருவாரன்னு நினைச்சிகிட்டு...

பொய் சொன்னா சாமி கண்ணை குத்தும்னு பயந்துட்டு...
WWF எல்லாம் உண்மைன்னு நம்பிகிட்டு...

பெப்சி மூடி எல்லாம் சேர்த்து குடுத்தா ஹெலிகாப்டர் கிடைக்கும்னு கடை கடையா மூடிய சேர்த்துகிட்டு...

அண்டர்டேக்கருக்கு ஏழு உசுருன்னு ஊர் பூராம் சண்டை போட்டுகிட்டு...

ஹாபின்னு யாரு யாரை கேட்டாலும் ஸ்டாம்ப் & காயின் கலெக்சன்னு சொல்லிகிட்டு...

ரஜினி திரும்பி பாத்தவே தீக்குச்சி பத்திக்கும்னு நம்பிகிட்டு...

வைக்கம் வீரர் கதை எல்லாம் உன்மைன்னு நம்பி, அந்த கருமத்தை எல்லாம் மனப்பாடம் பண்ணி பரிட்சை வேற எழுதிக்கிட்டு...

எவ்வளவு அப்பாவியா வாழ்ந்து இருக்கோம் நம்ம.

பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு


பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு...

1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்...
2.மேலாடையின்றியோ... ஆடை இன்றியோ... குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள்..

3.ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்..

4. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்..

5. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்.

6. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக் காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்..

7. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்..

8. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகி விடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

9. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

10 .உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்..

11. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

12. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள்.

13. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.

14. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டையிடாதீர்கள்..

15. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல..

காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்


நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறையின் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா? அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி, முழங்கால் மூட்டு வலி, கணுக்கால் எலும்பில் வலி, குதிகால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன். அதை விளக்கிக் கூறவும் கேட்டேன். அவரால் விளக்க முடியவில்லை. ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.  நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும், தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது, இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது). எனவே தான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது. நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது. மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பளுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது, மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது. இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பளுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது 

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்.

நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
படித்தேன்  பகிர்ந்தேன்.

உள்ளத்தில் இருக்கும் சிறு சிறு மனிதத் துளிகள்


நேர்கிறது சாலை விபத்து ,
உதவிக்காக நீள வேண்டிய கரங்கள் 
இன்று கேமராக்களுடன் 
உள்ளம் நொந்து 
சோகத்தில் மனிதன் ,
ஆறுதலுக்காக நீள வேண்டிய வார்த்தைகள் 
இன்று கேலிகளுடன் 
கேட்கிறான் உதவி
ஆபத்தில் மனிதன் ,
உதவிக்காக நீளாத கரங்கள் 
இன்று ஏளனப்படுத்தியபடி
மனம் மகிழ்கிறான் மனிதன் 
சிறப்புகளை செய்து ,
பாராட்ட மனமில்லாத மனிதன் 
வீசுகிறான் விமர்சனங்களை
எதிர்ப்பார்க்கிறான் மனிதன் அன்பை
மனிதனிடம் ,
கொடுக்கும் எண்ணம் இல்லாதவன் 
பரிசளிக்கிறான் கொடுப்பதாக துரோக , மோசடிகளை
தனக்கொரு வலியென்றால் கதறி அழுகிறான் 
தனக்கொரு இன்னல் என்றால் பதறித் திரிகிறான் 
ஏன் பிறரும் மனிதன் தானே என்ற உணர்வு அவனிடத்தில் இல்லாது போனது
எங்கே போயின மனிதம் .... ??
மனிதர்களின் இதயங்களில் அப்படியான புனித உணர்வு மீண்டும் துளிராதா .... ???
தொலைந்துதான் போயிற்றா 
இல்லை
இறந்துதான் போயிற்றா
குழம்பியே தவிக்கிறது
ஒருசிலரின் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறு சிறு மனிதத் துளிகள்.

பொது புத்தி உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள்


சகோதரிகளே..பொது புத்தி உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள்:

1: விலை கொடுத்து மணமகளையோ, அவள் மனதையோ  வாங்குவது சாத்தியம் அல்ல என்பதை அறியும் அளவுக்கு புத்தி உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள்.

2: உங்களை மணந்து கொள்வதால், அவர் தியாகம் செய்வதாகாது என்பதை அறியும் அளவுக்கு புத்தி உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள்.

3: உங்கள் மாதவிடாயின் போது உங்களுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அறியும் அளவுக்கு புத்தி உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள்.

4: ஒரு பெண்ணாக உங்களுக்கும் சில நேரங்களில் உடலுறவுக்கு "இல்லை" என்று சொல்ல உரிமை உண்டு என்பதை அறியும் அளவுக்கு அறிவு உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள், மேலும் அவர் விரும்பியபடி நீங்கள் இருக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் உங்களை மகிழ்ச்சியடையச் செய்து உங்களை நல்ல மனநிலையில் வைக்க முயற்சிக்க வேண்டும்.

5: பிரசவத்திற்குப் பிறகு உங்களுக்கு, பெரிய வயிறு,  stretch marks, தொய்வு மார்பகங்கள் மற்றும் சரியான உடல் வாகு இருக்காது  என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவு உள்ள ஒருவரை மணந்து கொள்ளுங்கள், மேலும் அவர் உங்களை மற்றொரு பெண்ணுடன் எப்போதும் ஒப்பிடக்கூடாது.

6, உங்கள் தொய்வு மார்பகங்கள் அல்லது stretch marks தாய்மையின் அடையாளம். (நீங்கள் அதைச் சரிசெய்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியும் என்றாலும், அவர் விமர்சனம் செய்வது ஏற்கத்தக்கதல்ல)

7: தினசரி சமைத்தாலும் சில நேரங்கள் உங்களுக்கும் சோர்வாக இருக்கும் என்பதை அறியும் அளவுக்குப் புத்திசாலியான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள், அவர் உங்களை இரவு உணவு சாப்பிட உணவகத்திற்கு அழைத்துச் செல்வதோ அல்லது அந்த நாளில் உங்களுக்கு சமையலில் ஒத்தாசை செய்வதோ உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பதை அறியும் அளவுக்குப் புத்திசாலியான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

8: உங்கள் விரக்தியை வெளிப்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு, உடன்படவும், உடன்படாமல் இருக்கவும், உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் உங்களுக்கு உரிமை உண்டு என்பதை அறியும் அளவுக்குப் புத்திசாலியான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

9: "மன்னிக்கவும்" என்று உங்களிடம் கேட்க நீங்கள் தகுதியானவர் என்பதை அறியும் அளவுக்குப் புத்திசாலியான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்,  அவர் தவறு செய்யும்போது மன்னிப்பு  கேட்கக் கடமைப்பட்டிருக்கிறார், மேலும் "மன்னிக்கவும்" என்று சொல்லித் தப்பிக்க தனது அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது.

10: ஒரு பெண்ணை அடிப்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்பதை அறியும் அளவுக்குப் புத்திசாலியான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

10: உங்கள் உடலை மட்டுமல்ல, உங்கள் மனதையும் நேசிக்கும் ஒருவரை மணந்து கொள்ளுங்கள், உங்கள் உடலைத் தொடாமலேயே உங்களுடன் பேசுவதை ரசிக்கும் ஒருவரை மணந்து கொள்ளுங்கள், உங்களைத் தொடாமல் உங்களுடன் பேச முடியாத ஒருவரை மணக்க வேண்டாம். 

தோழிகளே.. திருமணம் இருவருக்கானது. 
புரிந்துகொள்ளுங்கள். புரிய வையுங்கள்.

காது எதற்கு இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம்


காது எதற்கு இருக்கிறது - சொல்லுங்கள் பார்க்கலாம்!!!!

காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.!

ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது     
#நம் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும்  சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.

#ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்?  மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?

#பைக் நிற்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.

#ஆனால் மனிதனால் அது முடியும், அவன்  வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா"  திரவத்தினால் தான். 

#ஒரு டெட்பாடியை நிற்க்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க்க முடிகிறது,

#காது கேட்பதற்கும்  காக்லியா திரவம்  உதவுகிறது,  ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் நம் மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

 #10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்க்க போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சினைகள் வரும்,

 #முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து இறுதியில் காது கேட்க்கும் திறன் குறைந்து விடும்.

#காதின் மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் ஆனது, மண்ணெண்ணெய் ஸ்டோவில் புலன் வைக்காமல் அப்படியே எண்ணெய்யை ஊற்றினால் எப்படி சிதறி போகும்?

#அதே போன்று தான் அந்த காது மடல்கள் இல்லா விட்டால். சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி அதுவே நம்மைக் கொன்று விடும் அவ்வளவு வலியுடனானதாக இருக்கும்.

#அதை தான் ஃபில்டர் செய்கிறது காது மடல்களும் அதை சுற்றி உள்ள சிக்கலான அமைப்புகளும்.
இறைவனின் படைப்பில் அற்புதமே இது.......... அதுமட்டுமல்ல தினமும் காலையில் தோப்புக்கரணம் போடுவது மிகவும் காதுகளுக்கு நல்லது....

பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் முதன்மை செயலதிகாரிகான நேர்காணல்


25 வருடம் முன்பு நடந்த
உண்மை சம்பவம்....

ஒருமுறை  பில்கேட்ஸ்,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்
 முதன்மை செயலதிகாரியாக 
இருந்த நேரம் ஐரோப்பிய
 மைக்ரோசாப்டின்  கிளைக்கு
 தலைமை அதிகாரியை நியமிக்க
ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். 

கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் 
வரையில் வந்திருந்தார்கள்.
ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள்....
கருப்பு கோட், நீல சட்டை
புள்ளி போட்ட டையுடன்
 எல்லாவற்றையும் கவனித்தபடி 
ஒரு ஓரமாக   உட்கார்ந்திருந்தார்,
  நல்லதம்பி  என்பவர் ......

உள்ளே நுழைந்த பில்கேட்ஸ்
5000 பேர்களை பார்த்ததும் 
கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்...

 வந்திருந்த அனைவருக்கும் 
வணக்கம் வைத்தார்.....

நன்றியும்தெரிவித்தார்....

 நேர்காணலை சிக்கீரம் முடிக்கணும்
சிம்பிளா வைக்கணும்ன்னு 
முடிவு பண்ணினார்.....

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி 
ஒரு கேள்வி கேட்க நினைத்தார்....

 எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள்..

அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் 
ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.
நம்ம நல்லதம்பிக்கும்
ஜாவான்னா என்னானே தெரியாதுதான் இருந்தும் வெளியே போகலை
“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே
 இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.
நம்ம நல்லதம்பியோ நாமதான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதேடா சரி என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம்...

 சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”
இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு 
பில் கேட்ஸ் கேட்டார்...

மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் 
காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க
 நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார் நல்லதம்பி

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே?
 கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள்
 தெரிந்திருக்கும் என்று பார்ப்போம்
 என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம்
 செர்போ -க்ரோட் மொழி தெரியும்?” 
 செர்போ-க்ரோட், உலகில் அரிதாக
 பேசப்படும் மொழி. இப்ப, அரங்கில் 
இரண்டே பேர் இருந்தார்கள். 

அதில் ஒருவர் யாரென்று 
உங்களுக்கு தெரியும்

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம்
இதை பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம நல்லதம்பி 

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை 
சுற்றி உட்கார்ந்தார்கள். 
இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.
டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற?
 சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” – மனசுக்குள் நல்லதம்பி 

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் 
இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட்
 மொழியில் மைக்ரோசாப்ட்
 நிறுவனத்தை பற்றி, 
அதன் தொழில்நுட்ப திறன் 
பற்றி விவாதம் செய்யுங்க
என்று பில்கேட்ஸ் சொல்ல......

நல்லதம்பி அமைதியாக, 
பக்கத்தில் இருந்த 
இன்னொருத்தனை பார்த்தார்
 சின்ன வயசுக்காரன். 
நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான்
மூளைக்காரன் போல.....

நல்லதம்பி ஆரம்பித்தார்.
மெதுவாக, தம்பிக்கு எந்த ஊரு
 கேட்டது தமிழில்.....

அதுக்கு இன்னொருவர் சொன்னது
சேலம் மாவட்டம்   கஞ்சமலைக்கு  
பக்கம் கல்பாரப்பட்டி கிராமம் 
அண்ணே  நீங்க எந்த ஊருண்ணே 

நான்  தஞ்சாவூர் தம்பி

தமிழ்நாட்டில் பணக்கார ஊர்களில் முதலிடத்தில்


தமிழ்நாட்டில் பணக்கார ஊர்களில் முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?
  
தமிழ்நாட்டில் பணக்கார ஊர் என்றால் பலருக்கு உடனே தோன்றுவது சென்னையா? கோயமுத்தூரா என்று தான், ஆனால் இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருப்பது எந்த ஊர் தெரியுமா?

கன்னியாகுமரி...

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள் தான் அதிக வசதியாக வாழும் தமிழ்க மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றனர். அவர்களின் வருமானம், வாழ்க்கை முறையைப் பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் அதிகம் இருப்பது இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தான், அதே மாதிரி கேரள அரசுப் பணிகளிலும் இங்குள்ள நிறைய பேர் பணி புரிகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பதும் அதிகம் இந்த ஊர் மக்கள் தான்.

ரப்பர் ஏற்றுமதியில் இந்த மாவட்டம் முன்னணியில் உள்ளது, அதைப்போல இங்கு அதிக மீன்வளம் உள்ள அரபிக்கடல் இருக்கிறது, விவசாயம் செய்வது இங்கு குறைவு, விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் வேறு வேலை செய்து குடும்பத்தை சமாளிக்கும் திறமையானவர்கள் இங்கு இருக்கிறார்கள். அது மட்டுமின்றி கூலி வேலைகளுக்கு கூட தமிழ்நாட்டில் வேறு இடங்களை விட இங்கு ஊதியம் அதிகம்.

இந்த மாவட்டத்தில் 95%-க்கு மேல் காங்கிரீட் வீடுகள் தான் உள்ளன, தமிழ்நாட்டில் மீனவ கிராமங்கள் என்றாலே ஓலைக்குடிசை, சிறிய வீடுகள் என்று காட்சியளிக்கும் அதில் இந்த மாவட்டம் ஒரு விதிவிலக்கு, இங்குள்ள கடற்கரை கிராமங்களை கிராமங்கள் என்று சொல்வதற்கு பதிலாக கடற்கரை நகரங்கள் என்று சொல்லலாம். முன்னேறுவதற்கு ஜாதியோ நமது வாழ்விடமோ தடையில்லை என்பதற்கு இந்த மாவட்ட மீனவ மக்கள் ஒரு எடுத்துக்காட்டு.

இங்குள்ள மக்கள் அதிகம் ஆடம்பர வாழ்க்கையை விரும்பக் கூடியவர்கள், சொந்த தொழில் துவங்குவதில் ஆர்வம் காட்டக்கூடியவர்கள் பசுமை, நீர்வளம் என செழிப்பாக இருக்கும் இந்த ஊரில் வாழ்பவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தான்.

இந்த பதிவு ஒரு இடத்தை பெருமைப்படுத்த இல்லை, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சில அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட ஜாதி மக்களை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டு 'எங்கள் நிலங்களை ராஜராஜ சோழன் திருடிவிட்டார்.. அதனால் எங்களால் வளர முடியவில்லை' என்று அவர்கள் இப்போதும் அடிமையாக இருப்பது போன்ற பிரதிபலிப்பை உண்டாக்குகின்றனர்.

இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை, எல்லோராலும் பெரிய உயரத்தை எட்ட முடியும், அதற்கு கல்வியும், உழைப்பும், தன்னம்பிக்கையும் அவசியம் ஆனால் அதை எந்த அரசியல் கட்சிகளும் சரி, ஜாதி அமைப்புகளும் சரி யாருக்கும் சொல்லி கொடுக்காது.

அந்த தன்னம்பிக்கையும், கல்வியும்,உழைப்பும் இங்குள்ள மக்களிடமும் தானாகவே வந்து இருக்கிறது, அதுவே இங்குள்ள அனைத்து மக்களும் நல்ல நிலைமையை அடைய உந்துகோலாக இருக்கிறது. படித்தால், உழைத்தால் எல்லோராலும் நல்ல நிலைமையை அடையலாம் என்பதற்கு கன்னியாகுமரி ஒரு சிறந்த உதாரணம்.

டி வி ல விவசாயியை பேட்டி எடுக்கறாங்க


டி.வில ஒரு "விவசாயியை" பேட்டி எடுக்கறாங்க...

" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
"வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..
" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "
" அப்ப கருப்பு ஆடு..?!! "
" அதுவும் என்னுதுதான்..!! "
" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! "

டி.வில ஒரு "விவசாயியை" பேட்டி எடுக்கறாங்க...

" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
"வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..
" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "
" அப்ப கருப்பு ஆடு..?!! "
" அதுவும் என்னுதுதான்..!! "
" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! "

ஒழுக்கம் வலிக்கும் ஆனால் வருத்தம் அழிக்கும்


பெரும்பாலான ஆண்கள் தாமதமாக உணரும் ஒன்றை நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
ஒழுக்கம் வலிக்கும் .
ஆனால் வருத்தம், அழிக்கும்.

1. ஒழுக்கம் குறிப்பிட்ட நேரத்திற்கு வலிக்கிறது — வருத்தம் வாழ்நாள் முழுவதும் வலிக்கிறது

ஒழுக்கத்தின் வலி நிமிடங்கள் நீடிக்கும்.
வருத்தத்தின் வலி பல வருடங்களாக எதிரொலிக்கும்.

உடற்பயிற்சியைத் தவிர்ப்பது இன்று குறைவாகவே வலிக்கிறது, ஆனால் அது நாளை உங்கள் ஆரோக்கியத்தை பெரிதும் இழக்கிறது.

பொறுப்பைத் தவிர்ப்பது இப்போது நன்றாக இருக்கிறது, ஆனால் அது பின்னர் உங்கள் மரியாதையைப் பறிக்கிறது.

சிற்றின்பத்தை துரத்துவது அந்த நேரத்தில் இனிமையாக உணர்கிறது, ஆனால் வீணாக்கிய உங்கள் நேரத்தை நினைக்கும்போது பின்னாளில்  கசப்பாக இருக்கிறது.

2. ஒழுக்கத்தை தவிர்த்து ஓடுபவர்கள் எப்போதும் வருத்தத்தை சந்திக்கிறார்கள்.
பலவீனமான ஆண்கள் தாங்கள் வலியிலிருந்து தப்பிக்கிறோம் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் நாளை சந்திக்க போகும் பெரிய வலியை உணராமல் இன்றைய சிறிய வலியை தவிர்க்கிறார்கள்.

பிறரை வழிநடத்தாத மனிதன், தன்னையும்  அவமதிக்கிறான்.
தியாகம் செய்ய தயாரில்லாத மனிதன், தன்னைத் தனியாக காண்கிறான்.

3. ஒழுக்கம் உன்னை வளர்க்கிறது - வருத்தம் உன்னை அழிக்கிறது..

ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு தேர்வும், ஒவ்வொரு எல்லையும் உன் தோள்களில் பாரமாக இருக்கிறது.

இப்போது அது கனமாக உணர்கிறது.
ஆனால் ஒரு நாள், அது உன் பலமாகும்.

வருத்தம் அதற்கு நேர்மாறானது.
அது இப்போது லேசாகத் தெரிகிறது - ஆனால் சிறிது காலத்தில் அது திரும்பி வரும்போது, ​​உன்னை நசுக்குகிறது.

4. ஒழுக்கத்தைத் தேர்ந்தெடுத்த மனிதர்களை உலகம் மதிக்கிறது.

தனது நாட்களை வீணடித்த மனிதனை யாரும் போற்றுவதில்லை.
சாக்குப்போக்குகளில் மூழ்கிய மனிதனை யாரும் மதிப்பதில்லை.
ஆனால் ஒழுக்கமான மனிதனை?
அவரது எதிரிகள் கூட அவரை மதிக்கிறார்கள்.
அவரது துரோகிகள்  கூட அவரை புகழ்கிறார்கள்.

5. தற்காலிக வருத்தம் கொடுத்த வலியையும் விட, ஒழுக்கம்  தவிர்த்த மனிதன் ஒவ்வொரு இரவும் வருத்தத்தை அனுபவிப்பான்.

குடும்பத்தை கைவிட்ட மனிதன் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் வருத்தத்தை அடைவான்.
தன் வாழ்க்கையை சரியாக வாழாத மனிதன் வயதானவுடன் வருத்தத்தை அடைவான்.
உங்களுக்கு வலி இருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்வதை விட அதிகமான வலி எதுவும் இல்லை - ஆனால் நீங்கள் உணர்வதில்லை.
நண்பர்களே, நீங்கள் எல்லா வகையிலும் வலியை எதிர்கொள்வீர்கள்.
ஒழுக்கத்தின் வலி, அல்லது வருத்தத்தின் வலி.

ஒன்று உங்களை வலிமையாக்குகிறது.
மற்றொன்று உங்களை உடைத்து தூளாக்குகிறது.
புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்.

ஏனென்றால் ஒழுக்கம் உங்களை விரைவில் விடுவிக்கும், வருத்தம் உங்களை நீண்ட நேரம் வேட்டையாடும்.

Contact Form

Name

Email *

Message *