கிறிஸ்தவ பஜனை பாடல் வரிகள்


அப்பா தந்தையே மனம் வருந்தி வருகிறேன்

அன்போடு அரவணைத்து ஏற்றிடுவாய் இறைவா - 2

1. உன் அன்பை மறந்து நான் ஊதாரியாகினேன் - 2

உன் உறவை உணர்ந்து நான் உம்மிடம் வருகிறேன் - 2

2. உன் வார்த்தை மறந்து நான் ஊதாரியாகினேன் - 2

உன் வழியில் நடந்திட உம்மிடம் வருகிறேன் - 2

3. உன் இரக்கம் மறந்து நான் ஊதாரியாகினேன் - 2

உன் கருணை உணர்ந்து நான் உம்மிடம் வருகிறேன் - 2


அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது

இயேசுவின் திருவடி சரணாலயம்

அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்

இயேசுவின் திருவடி சரணாலயம்

சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம் - 2

2. உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம் இயேசுவின்...

உலகினில் என்றும் நிலையான செல்வம் இயேசுவின்...

3. வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது இயேசுவின்...

மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும் இயேசுவின்...


அன்பு செய்ய வரம் வேண்டும் இறைவா இறைவா - 2

1. உதவி செய்ய நான் நினைக்க

உதைத்து என்னை வதைப்பவரை

2. உறவு கொள்ள நான் நினைக்க

ஊறுசெய்ய நினைப்பவரை

3. பிழை பொறுக்க நான் நினைக்க

பேதை என பழிப்பவரை

4. துன்ப துயர் நான் சுமக்க

துணை வராது அகல்பவரை

5. கண் கலங்கி நான் துடிக்க

காணாமல் செல்பவரை


அன்பெனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லையே

1. என்னென்னவோ திறமைகள் எனக்கிருந்தும் அன்பெனக்கு....

எதுவரைக் கல்வியை நான் அறிந்தும் அன்பெனக்கு....

2. அனைத்தையும் நான் இங்கு அறிந்திருந்தும் அன்பெனக்கு....

ஆற்றல்கள் அனைத்தும் எனக்கிருந்தும் அன்பெனக்கு....

3. விசுவாசத்தில் நான் நிலைத்திருந்தும் அன்பெனக்கு....

ஆண்டவரை நான் அறிந்திருந்தும் அன்பெனக்கு....


இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே

ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே - 3

2. காலமும் உனையே காண்பதற்கே

காரிருள் நீக்கி அருள்வாயே - 3

3. இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே

இதயத்தில் அமைதியை அருள்வாயே - 3


இயேசு வாராய் நீ வாராய் எந்தன் வாழ்வினிலே - 2

வேக(த)மாய் நீ வாராய் எந்தன் வாழ்வினிலே - 2

வேக(த)மாய் இறங்கி வா எந்தன் வாழ்வினிலே

2. இயேசு வாராய் நீ வாராய் எந்தன் வியாதியிலே

3. இயேசு வாராய் நீ வாராய் எந்தன் ஆன்மாவில்

4. இயேசு வாராய் நீ வாராய் எந்தன் நெஞ்சினிலே


இயேசுவே உமது விலைமதிப்பில்லா

இரத்தத்தினால் என்னை மீட்டருள்வாயே - 2

1. பாவங்கள் போக்கி பரிசுத்தமாக

பரமன் உந்தன் பாதம் வந்தேனே - 2

2. ஆவியைத் தந்து அமைதியில் வாழ

அழைக்கும் உந்தன் கரம் பிடித்தேனே - 2

3. எல்லாம் உன் அன்பே என்று நான் வாழ

எல்லாமே உமக்காய் அர்ப்பணித்தேனே - 2


இயேசுவே என் உயிரே என் அருகே நீ இருப்பாய் - 3

இயேசுவே என் அன்பே என் இதயம் நீ இருப்பாய் - 3

இயேசுவே என் வாழ்வே என் துணையாய் நீ வருவாய் - 3


இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்

1. நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன்

உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்

என்னை மன்னியும் தெய்வமே

2. உம்மை மறுதலித்தேன் பின்வாங்கிப் போனேன்

உம் வல்லமை இழந்தேனய்யா

என்னை மன்னியும் தெய்வமே

3. முள்முடி தாங்கி ஐயா காயப்பட்டீர்

நீர் எனக்காகப் பலியானீர்

உம் இரத்தத்தால் கழுவிவிடும்

4. துன்ப வேளையிலே மனம் துவண்டு போனேன்

உம்மை நினையாது தூரப் போனேன்

என்னை மன்னியும் தெய்வமே

5. அநியாயம் செய்தேன் கடும் கோபம் கொண்டேன்

பிறர் வாழ்வைக் கெடுத்தேனய்யா

என்னை மன்னியும் தெய்வமே


இறை சமூகமாய் நாங்கள் வாழவே

இறைவா இறைவா உந்தன் அருள்புரிவாயே - 2

1. அன்பினைக் கொண்டு பகைமையை வென்று

பண்புடனே நாங்கள் வாழ்ந்திடவே

அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு

அன்புறவில் நாங்கள் வளர்ந்திடவே

2. நிறை குறையோடு பிறரையும் ஏற்று

நிறைமகிழ்வை வாழ்வில் உணர்ந்திடவே

இயேசுவின் வழியில் இலட்சியப் பணியில்

இணைந்திருந்து நாங்கள் செயல்படவே

3. இறையாட்சியில் நம்பிக்கைக் கொண்டு

இறைவாக்குப் பணியை நாம் தொடர்ந்திடவே

புது உலகமைக்க திடமுடன் உழைக்கும்

புதுப்படைப்பாய் என்றும் வாழ்ந்திடவே


இறைவா உம் தயவினிலேவாழ்ந்திட வந்தோம்

- பருவமழை பொழிகவென்று வேண்டியே நின்றோம்

- நீர்நிலைகள் பெருகவென்று வேண்டியே நின்றோம்

- பயிர்நிலைகள் செழிக்கவென்று வேண்டியே நின்றோம்

- உயிர்களெல்லாம் மகிழ்கவென்று வேண்டியே நின்றோம்

- நோய்நொடிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்

- பசிப்பிணிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்

- வறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்

- சிறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்

- செழுமையெல்லாம் சேர்கவென்று வேண்டியே நின்றோம்

- நீதிநெறி செழிக்கவென்று வேண்டியே நின்றோம்

- மனக்குறைகள் தீர்க்கவென்று வேண்டியே நின்றோம்

- மனிதகுலம் வாழ்கவென்று வேண்டியே நின்றோம்


உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் - 2

- உலகின் பாவம் போக்கும் இயேசுவே...

- மனிதனாய் மண்ணில் பிறந்த இயேசுவே...

- வியர்வையாய் திரு இரத்தம் சிந்திய இயேசுவே...

- கசையால் அடிபட்டு நொந்த இயேசுவே...

- முள்முடி தலையில் தாங்கிய இயேசுவே...

- என் பாவச் சிலுவையைச் சுமந்த இயேசுவே...

- எனக்காகச் சிலுவையில் அறையுண்ட இயேசுவே...

- சிலுவையில் தொங்கியே மரித்த இயேசுவே...

- மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த இயேசுவே...

- பாவியைத் தேடி மன்னிக்கும் இயேசுவே...


எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்

எல்லார்க்கும் துணையாகும் வரம் ஈய வேண்டும் - 3

2. எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்

மெய்யான வழி சென்று மகிழ்ந்தாட வேண்டும்

3. எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்

எந்நாளும் உன் நாமம் நான் பாட வேண்டும்


என் இயேசுவே என்னை மன்னியும் - 4

1. உன் குரல் எனத் தெரிந்தும் கேட்காமல் நான் திரிந்தேன்

2. உன் முகத்தைக் கண்ட பின்னும் பேசாமல் திரும்பிக் கொண்டேன்

3. உன் அருள் எனில் இருந்தும் உணராமல் நான் வாழ்ந்தேன்

4. உன் வழியை அறிந்திருந்தும் நடவாமல் உதறிச் சென்றேன்

5. உதவி செய்ய வாய்ப்பிருந்தும் உதவாமல் உதறிச் சென்றேன்

6. உண்மை வாழ்வில் தெளிவிருந்தும் உலகப் போக்கில் நான் அலைந்தேன்


என் தலைமீது உம் திருஇரத்தம் சொரிந்து

என் பாவங்களைக் கழுவும் என் இயேசுவே

1. இறை உன்னை மறந்து நான் பாவம் செய்தேன்

உம் இதயத்திற்கெதிராய் பாவம் செய்தேன்

2. பிற தெய்வம் தொழுது நான் பாவம் செய்தேன்

உன் நிறை அன்பிற்கெதிராய் பாவம் செய்தேன்

3. அயலானைப் பகைத்து நான் பாவம் செய்தேன்

உன் அன்பிற்கு எதிராய் பாவம் செய்தேன்


என் பிழை எல்லாம் பொறுத்தருளும் - 2

- செந்நீர் வியர்வை சொரிந்தவரே...

- புண்படக் கசையால் துடித்தவரே...

- முள்முடி சூடிய மன்னவரே...

- துன்பச் சிலுவை சுமந்தவரே...

- தன்னுயிர் தியாகம் புரிந்தவரே...


என் வாழ்வில் என்றும் நீ இயேசுவே

எந்நாளும் நீயே என் இயேசுவே - 2

1. தாயுள்ளத்தோடு எனைத் தேற்ற வந்தாய்

தடுமாறி நின்றேன் உன் கரம் நீட்டிக் காத்தாய்

2. சுகமான வாழ்வு நான் வாழ்ந்த போது

சுவையூட்டும் அமுதாய் எனில் சேர்ந்த தலைவா

3. புயல் வீசும் நேரம் படகாக நானும்

அலைமோதி நின்றேன் கரை சேர்த்துக் காத்தாய்


என் விழியே இயேசுவை நீ பாரு

என் நாவே இயேசுவை நீ பாடு - 2

2. என் சிரசே இயேசுவை நீ வணங்கு - 2

என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு - 2

3. என் கரமே இயேசுவின் மொழி எழுது - 2

என் காதே இயேசுவின் மொழி கேளு - 2

4. என் காலே இயேசுவின் வழி செல்லு - 2

என் உயிரே இயேசுவின் பதம் சேரு - 2


என்னுயிரே இறைவா உன் திருவடி சரணம்

உன் பதம் அமர்ந்து உன் முகம் காண

என்ன தவம் செய்தேன் நான் - 2

- உம் மொழி கேட்க

- உம் அன்பை சுவைக்க

- உம் புகழ் பாட

- உன்னுடன் பேச

- உன் அருள் பெறவே


கருணை இறைவா சரணம்

கடைக்கண் பாராய் சரணம் - 2

1. நட்பினை விடுத்தோம் நலந்தனை இழந்தோம் - 2

2. ஆசைகள் வளர்த்தோம் அன்பினை விடுத்தோம் - 2

3. நீதியை மறந்தோம் நேர்மையைத் துறந்தோம் - 2

4. ஒளியினை வெறுத்தோம் இருளினில் அலைந்தோம் - 2

5. மன்னிக்க மறந்தோம் மரமென இருந்தோம் - 2


கருணை காட்டுமய்யா கவலை நீக்குமய்யா

1. ஆதாமின் பிழைகளைப் பொறுத்தது போல்

அன்போடு அணைத்து வளர்த்தது போல்

2. இஸ்ராயேல் செயல்களைப் பொறுத்தது போல்

இடர்களைப் போக்கிக் காத்தது போல்

3. தாவீதின் பிழைகளைப் பொறுத்தது போல்

தாழ்நிலை நீக்கி அணைத்தது போல்

4. சமாரியப் பெண்ணைப் பொறுத்தது போல்

சத்திய வழியில் அழைத்தது போல்

5. விபச்சாரப் பெண்ணைப் பொறுத்தது போல்

விடுதலை வாழ்க்கை கொடுத்தது போல்

6. சிலுவையில் கள்வனைப் பொறுத்தது போல்

சிதறிய மனிதனை இணைத்தது போல்

7. கொலை செய்த யூதரைப் பொறுத்தது போல்

குவலயம் வாழச் செய்தது போல்


இறைவா..... இறைவா.... இறைவா....

கருணை தெய்வமே கனிந்துருகும் இயேசுவே - 2

1. கல்லினில் ஈரம் தந்தவரே - 2 - உம்

நெஞ்சினில் நேசம் நானுணர்ந்தேன்

2. தனிமையில் இனிமை நீயானாய் - 2 - உன்

உறவினில் நிறைவை நானுணர்ந்தேன்

3. உனது அன்பை நான் கண்டேன் - 2 - அதன்

இனிமையை சுவைத்து மகிழ்ந்திருந்தேன்

4. மனிதனான உனைக் கண்டேன் - 2 - என்

மானிட மாண்பின் நிலை உணர்ந்தேன்


குன்றின் மேலமர்ந்து மாபரன் இயேசு

மன்றினைப் பொழிந்து அறிவுரை தந்தார் - 2

அந்தக மாந்தர்க்கு சீர்வழி காட்டிட

சிந்தையைத் தூண்டிடும் தேன்மொழி தந்தார் - 2

1. எளிய மனத்தோர் பேறுபெற்றோர்

எழில்மிகு விண்ணகம் அவர்களதே

துயரமுறுவோர் பேறுபெற்றோர்

அயரா ஆறுதல் மிகப் பெறுவர்

நீதியின் மைந்தர் நிறைவாழ்வு பெறுவர்

நீதி நல்வேந்தனின் தத்துவமன்றோ

2. சாந்தமுடையோர் பேறுபெற்றோர்

தாரணி முழுவதும் அவர்களதே

இரக்கமுடையோர் பேறுபெற்றோர்

இறைவனின் இரக்கம் மிகப் பெறுவர்

தூய மனத்தோர் கடவுளைக் காண்பர்

தூய நல்இயேசுவின் பொன்மொழியன்றோ


தந்தையே உம்மை வணங்குகிறோம்

வாழ்வை உமக்கு அளிக்கின்றோம்

உம்மை அன்பு செய்கின்றோம்

- இயேசுவே உம்மை வணங்குகிறோம்

- ஆவியே உம்மை வணங்குகிறோம்

- மூவொரு இறைவா வணங்குகிறோம்


தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து

ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்

எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்

உம் பாதம் வைத்தே பணிகின்றோம்

2. இயேசுவே இறைவா...

3. ஆவியே இறைவா...

4. மூவொரு இறைவா...


தந்தையே என் இறைவா உமதன்பைத் தருவாய் - 3

2. இயேசுவே என் ஒளியே என்னோடு இருப்பாய் - 3

3. ஆவியே என் உயிரே துணையாக வருவாய் - 3


தனி முதல் இறைவனாம் தந்தையே வாழி

தனியொரு மைந்தனாம் இயேசுவே வாழி

தூய நல் ஆவியாம் இறைவனே வாழி

மூவொரு இறைவா என்றுமே வாழி


தேவா உன் பதம் அமர்ந்து

ஒரு வரம் கேட்டு நின்றோம் - 2

நாதா உன் அமைதியை தந்தடுவாய் - 2

உன் தாள் சரணமய்யா - 2

2. உன் கையில் என் பெயர் பொறித்து

கண்ணென எனைக் காப்பாய் - 2

சிறகுகளால் என்னை அரவணைப்பபாய் - 2

உன் தாள் சரணமய்யா - 2

3. அன்பால் அக இருள் களைய உன்னொளி தந்திடுவாய் - 2

நம்பினேன் உனையே இறையவனே - 2

உன் தாள் சரணமய்யா - 2


தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே

இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே - 2

2. தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே

இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே - 2

3. தொடும் என் மனதினையே மனப்புண்கள் ஆற வேண்டுமே

இயேசுவே மனப்புண்கள் ஆற வேண்டுமே - 2

4. தொடும் என் உடலினையே உடல் நோய்கள் தீர வேண்டுமே

இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே - 2

5. தொடும் என் ஆன்மாவையே என் பாவம் போக்க வேண்டுமே

இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே - 2

6. தொடும் என் இதயத்தையே உம் அன்பு பெருக வேண்டுமே

இயேசுவே உம் அன்பு பெருகிட வேண்டுமே - 2


நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே - 2

1. விழுந்து விட்டேன் மீண்டும் தவறிவிட்டேன்

என்னைத் தூக்கும் இயேசுவே

2. சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்

என்னைத் தேற்றும் இயேசுவே

3. புரியவில்லை பாதை தெரியவில்லை

பாதை காட்டும் இயேசுவே

4. நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்

எந்தன் தாகம் தீருமே


புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு இயேசுவை

புகழ்ந்திடு காலையிலே

- புகழ்ந்திடு பகலினிலே

- புகழ்ந்திடு மாலையிலே

- புகழ்ந்திடு இரவினிலே

- புகழ்ந்திடு பொழுதெல்லாம்


மன்னிக்க வேண்டும் அன்பின் இறைவா - 2

- பொய்வழி நின்றேன் பெரும் பழி சுமந்தேன்

- துன்புறும் மனிதர் தோழமை மறந்தேன்

- பெண்ணினம் இகழ்ந்தேன் பெரும் பாவம் புரிந்தேன்

- மானுடம் போற்றும் மாண்பினைக் கொன்றேன்

- தவித்திடும் ஏழையர் உரிமையைப் பறித்தேன்

- பேரருள் நினைத்தேன் பேதைமை களைந்தேன்


மூவொரு இறைவனே உயிர்களின் முதல்வனே

நான் வாழ இன்னுயிர் தந்தவனே

எங்கும் நிறைந்து வாழும் தேவா நீ வாழியவே - 3

ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே

உன் திருப்பாதம் சரணம் சரணம் - 4

1. சேயாக நானும் அழுகின்ற போது - 2

தாயாக உன் அன்பை நானும் சுவைத்தேன்

2. அன்பெனும் கடலில் நான் மூழ்கும் போது - 2

ஆண்டவன் உன்னைக் கண்டேன்

3. மெழுகாக நானும் தேய்ந்திடும் போது - 2

உன் தியாக வாழ்வில் நான் கலந்தேன்


மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா

மன்னிப்பு மன்னிப்பு தாருமே இறைவா

மன்னிப்புத் தாருமே இறைவா - 2

1. ஆண்டவர் ஆன்மாவை விரும்புகின்றார்

மாண்டிட்ட ஆன்மாவைத் தேடுகின்றார்

அண்டிடும் பாவிக்கு அருளுகின்றார் - நேரில்

வேண்டிடும் துரோகிக்கு இரங்குகின்றார்

2. ஆண்டவர் ஞானத்திற் கினிமை உண்டு

கண்டிக்கக் காலத்தை கடத்துகின்றார்

கண்டித்துக் கருணை சொல் கூறுகின்றார் - பாவி

திருந்திட அருள்கொடை வழங்குகின்றார்

3. குற்றங்கள் இல்லையே என்று சொன்னால்

நம்மைத்தான் ஏமாற்றி நலிந்திடுவோம்

குற்றங்கள் அனைத்தும் எடுத்துரைத்தால் - தேவன்

குற்றத்தை மன்னித்து வாழ்வளிப்பார்


வந்தருளும் ஆண்டவரே உடனே வந்தருளும் - 2

1. வேண்டுகின்றேன் தினமும் தொடர்ந்து - 2

2. துவளுகின்றேன் தினமும் தனியே - 2

3. தேடுகின்றேன் தினமும் உன்னையே - 2

4. அழுகின்றேன் தினமும் நொந்து - 2

5. புலம்புகின்றேன் தினமும் அழுது - 2

6. வருந்துகின்றேன் தினமும் நினைத்து - 2


வாழ்வு தருவது இறைவார்த்தை - 2

1. எளிய மனத்தோர் பேறுபெற்றோர்

விண்ணரசு அவர்களதே - 2

2. துயரமுள்ளோர் பேறுபெற்றோர்

ஆறுதலை அடைவார்கள் - 2

3. சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர்

மண்ணுலகு அவர் உரிமை - 2

4. நீதியில் நிலைப்போர் பேறுபெற்றோர்

நிறைவினையே பெறுவார்கள் - 2

5. இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்

இரக்கத்தையே பெறுவார்கள் - 2

6. தூய உள்ளத்தோர் பேறுபெற்றார்

இறைவனையே காண்பார்கள் - 2

7. சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர்

இறைமக்களாய் திகழ்வார்கள் - 2

8. துன்பம் சுமப்போர் பேறுபெற்றோர்

விண்ணரசு அவர்களதே - 2

9. விசுவாசம் கொள்வோர் பேறுபெற்றோர்

பலன்நிறை வாழ்வைப் பெறுவார்கள் - 2


வாழ்வென்ற கொடைக்காக நிறைவாக யாம்

நன்றி நவில்கின்றோம் - அதை

முறையாக வாழ்ந்திடவே நிறை ஞானம்

தினம் நல்க வேண்டுகிறோம்

வாழ்கின்ற நிமிடங்கள் பயனுள்ளதாய் மாற

வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்தே யாம் வாழ்ந்திட

உமதாவி எனை ஆள வேண்டும்

வாழ்க்கையை வாட்டிடும் துயரங்கள் சோகங்கள்

பாதையை மறைத்திடும் இருளான மேகங்கள்

என்றென்றும் மறைந்தோட வேண்டும்

இறை இயேசு நாயகன் காட்டிய வழியிலே

நிறைவாழ்வு காண்போம் - 2


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *