புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் முறை


புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் முறை
கொடிவகை பயிர்களுக்கு புண்ணாக்கு கரைசல் தயாரித்து பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்கும் முறை 
தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் :
தேங்காய் புண்ணாக்கு 5 கிலோ
வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ
பருத்திக் கொட்ட புண்ணாக்கு 5 கிலோ 
செய்முறை 
மூன்று புண்ணாக்கையும் ஒரு டிம்பில் கொட்டி நன்கு முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 4 நாட்களுக்கு ஊற விட வேண்டும். நான்கு நாட்கள் கழித்து அசோஸ்பைரில்லம் 2 கிலோ> சூடோமோனஸ் 2 கிலோவையும் அதில் கொட்டி தண்ணீர் ஊற்றி கறைத்து திரும்ப 4 நாட்களுக்கு ஊற விட வேண்டும். அதன் பிறகு அதில் 2 லிட்டர் கியூமிக் கரைசலை அதில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு காலை அல்லது மாலை நேரத்தில் தண்ணீர் பாயும் சமையத்தில் செடிகளுக்கு ஊற்றி விடலாம் 
பயன்கள்
செடி இது ஒரு வளர்ச்சி ஊக்கி மாதிரி செயல்படும் செடி விரைவாக வளரும் 
வேர் வளர்ச்சி அதிகரிக்கும். பூ , பிஞ்சு அதிகம் பிடிக்கும். காய்கள் நல்ல தரமானதாக இருக்கும்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *