ஆசிரியர் கண்டிக்காதவனை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்


ஒரு உண்மை சம்பவம்.

ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது. சிகரெட் பிடிக்கப் பழகினான். பிறகு ஒரு திரைப்பட நடிகருக்கு ரசிகர் ஆனான். பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான். 

தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான். அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.

ஜாதி, மத, இன இயக்கத்தில் இணைந்தான் அந்தத் இயக்கத் தலைவனை ஆட்சியில் அமர்த்த அரசியல் செய்தான்.

அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால். பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான். இறுதியில் கொ**காரனாகவும் ஆனான்...

கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து, இறுதியாக... தூ*கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூ*கிற்கான நாளும் குறிக்கப்பட்டது.

தூ*கிற்கு முன்தினம் கடைசி ஆசை கேட்கப்பட்டது. பெற்றோரை சந்திக்க விரும்பினான் பெற்றோரும் வந்தனர்.

கதறினர் போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூ*குக்கு அனுப்பி விட்டதாக பெற்றோர் அழுது புலம்பினர்.

மகன் அமைதியாகச் சொன்னான். அவர்கள் காரணமில்லை... நீங்கள்தான் காரணம், நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது. ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.

வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும். அடித்து மிரட்டி. போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.

அதிலிருந்து ஆரம்பித்த என் வீழ்ச்சிதான் தூ*கு மேடை வரை வந்திருக்கிறது! என்னை காப்பாற்ற ஜாதியோ, மதமோ, இனமோ அதன் தலைவனோ, அரசியலோ அந்த நடிகனோ இல்லை கடவுளாலும் முடியாது சட்டம் தன் கடமையை செய்கிறது.

“எனது தூ*குக்கு நீங்கள்தான் காரணம்" என அழுதபபடியே சொன்னான். ஆசிரியர் கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும். இதை பெற்றோர் உணரவேண்டும்.

பரிவும், பாசமும் பிள்ளைகளின் பண்பையும், வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாற்றிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்.

Ultimate Guides on Earn Money Online:
1001 Ways to Make Money Online at Home Free Fast Updated

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *